பஞ்சாப் நேஷனல் வங்கி வரும் 12 மாதங்களில் 200 முதல் 300 நட்டம் அளித்து வரும் வங்கி கிளைகளை மூட அல்லது இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது.
நாங்கள் இதுவரை 3 வங்கி கிளைகளைத் தான் மூடி இருக்கின்றோம் என்றும் ஒரு ஆண்டில் 200 முதல் 300 நட்டம் அளிக்கும் வங்கி கிளைகள் வரை மூட அல்லது இடமாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் நிர்வாக இயக்குனர் சுனில் மேத்தா தெரிவித்தார்
வங்கி கிளைகள்
2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 6,937 வங்கி கிளைகள் இருந்தன. இதுவே ஏப்ரல், ஜூன் மாதத்தில் 6,946 ஆக அதிகரித்தது. இரண்டாம் காலாண்டில் மட்டும் 6 வங்கி கிளைகள் மூடப்பட்டு 6,940 ஆகக் குறைந்துள்ளது.
நட்டம் அளித்து வரும் வங்கி கிளைகளை லாபம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருவதாக மேத்தா கூறினார்.
குழு
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கி மூத்த அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்து வங்கி கிளைகள் பற்றி ஆராய்ந்து வருகின்றது.
ஏடிஎம் மையங்கள்
பஞ்சாப் நேஷனல் வங்கி சென்ற 6 மாதத்தில் 10,681 ஆக இருந்த ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கையில் 928 மையங்களை மூடிவிட்டு 9,753 ஆகக் குறைத்துள்ளதாக 2 காலாண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஊழியர்களின் நிலை
வங்கி கிளைகளை டிஜிட்டல் மையமாக்குவது போன்ற பணிகளிலும் வங்கி தரப்பு இயங்கி வருவதால் ஊழியர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகவும் வாய்ப்புள்ளது.
ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கியும் மே மாதம் வங்கிகளுக்கு இடம் மற்றி அமைக்க, வங்கி கிளைகளை மூட அனுமதிகளை வழங்கியுள்ளது. இதனால் எங்கு வாடிக்கையாளர்களுக்கு வங்கி தேவைகள் உள்ளதோ அங்குச் சிறப்பான சேவை அளிக்க முடியும் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விலக்கு அளிக்கப்பட்டுள்ள வங்கி கிளைகள்
பஞ்சாப் நேஷ்னல் வங்கி கிளைகள் மூடும் பட்டியலில் கிராமப் பிற கிளைகள் மற்றும் செமி அர்பன் கிளைகள் போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications