டெல்லி: ஷாஹீன் பாக்கில் ஒரு தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் வாடிக்கியாளர் ஒருவருக்குப் பணம் எடுக்கும் போது பாதி மட்டும் அச்சடிக்கப்பட்ட 2,000 ரூபாய் நொட்டு வந்துள்ளது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதி மட்டும் அச்சடிக்கப்பட்ட 2,000 ரூபாய் நோட்டைப் பார்த்த வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்ததுடன் வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டதுடன் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
வழக்கு
இது குறித்து ஐபிசி பிரிவு 420-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஜமியா பொலிஸ் நிலையம் காவல் நிலையம் விசாரித்து வருவதாக டிசிபி ரோமில் பானியா கூறினார்.
நிகழ்வு எப்படி நடந்தது
திங்கட்கிழமை மதியம் தனது காய் கறி அங்காடியில் இருந்து ஷாஹீன் பாக்கில் ஒரு தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் 10,000 ரூபாய் பணத்தினை எடுக்க முயன்ற வாடிக்கையாளருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
பணம் எடுக்கும் போது என்ன ஆனது?
ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 10,000 ரூபாய் எடுத்த போது 2,000 ரூபாய் நோட்டுகள் 4, 500 ரூபாய் நோட்டுகள் 3 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் 5 வந்துள்ளது. இதனை எண்ணி சரிபார்க்கும் போது ஒரு 2,000 ரூபாய் நோட்டு மட்டும் பாதி 2000 ரூபாயாகவும், பாதி வெள்ளைத் தாளாகவும் டே போட்டு ஒட்டப்பட்டு இருந்துள்ளது என்ற காவல் துறை தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர் சேவை மையம்
அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் முதலில் தான் கணக்கு வைத்து யெஸ் பாங்க் வாடிக்கையாளர் சேவை மையத்தினை அணுகியுள்ளார். அவர்கள் அருகில் உள்ள போகல் கிளையில் புகார் அளிக்கும்படி தெரிவித்துள்ளனர். பின்னர்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சில்டரன்ஸ் பாங்க் ஆப் இந்தியா பெயரில் 2,000 ரூபாய் நோட்டு
சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சங்கம் விஹார் எஸ்பிஐ ஏடிஎம் மையம் ஒன்றில் சில்டரன்ஸ் பாங்க் ஆப் இந்தியா பெயரில் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் வந்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஏடிஎம் மையத்தில் பணத்தினை வைத்த நிறுவனத்தின் மோசடி நடவடிக்கை என்பதும் தெரியவந்தது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications