83% பணம் மட்டுமே புழக்கத்தில் வந்துள்ளது.. நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிப்பதாக மோடி பெரிய அளவில் யாரிடமும் ஆலோசனை செய்யாமல் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 80 சதவீதத்திற்கும் அதிகமாகப் பணப் புழக்கத்தில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தார்.

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் நாட்டின் பொருளாதாரம் அதிகளவில் பாதிக்கப்பட்ட நிலையில், பணப்புழக்கமும் பெரிய அளவில் பாதித்ததது.

பணப்புழக்கம்

பணப்புழக்கம்

நவம்பர் 8,2016க்கு முன் இந்தியாவின் பணப்புழக்கத்தின் அளவு 17.77 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. பழைய 500 மற்றும் 1000 ரூபாயை அரசு திரும்பப் பெற்று புதிய 500, 2000 ரூபாயை வெளியிட்ட நிலையிலும் நாட்டின் பணப் புழக்கம் முழுமையான அளவை அடையவில்லை.

83 சதவீதம் மட்டுமே

83 சதவீதம் மட்டுமே

ஆகஸ்ட் 4, 2017 கணக்கின் படி இந்தியாவில் பழைய அளவீட்டை ஒப்பிடுகையில் 83 சதவீதம் அளவில் மட்டுமே பணப்புழக்கம் திரும்ப அடைந்துள்ளது.

அதாவது 17.77 லட்சம் கோடியில் 14.75 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே திரும்பப் பணப்புழக்க சந்தைக்கு வந்துள்ளது.

 

வெற்றி

வெற்றி

பணமதிப்பிழப்பால் இந்தியாவில் நடந்த மாற்றங்களை மத்திய நிதியமைச்சகம் பட்டியல்போட்டுள்ளது.

1. கருப்புப் பணம் ஒழிந்தது.
2. கள்ள நோட்டுகள் அழிக்கப்பட்டது.
3. தீவிரவாத்திற்கு அளிக்கப்படும் நிதி முழுமையாகத் தடுக்கப்பட்டது.
4. முறையற்ற பொருளாதாரத்தில் இருந்து முறையான பொருளாதாரத்திற்கு மாறியுள்ளது.
5. அனைத்துப் பணம் கணக்கிற்குள் வந்துள்ளது.
6. வரி செலுத்துவோர் தளம் விரிவாக்கம் அடைந்துள்ளது.
7. டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் அதிகரித்துள்ளது.

 

டிவீட்

இதுக்குறித்து மத்திய நிதியமைச்சகம் செய்த டிவீட்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+