ஆதார் இணைப்பினை அரசின் பல திட்டங்களுக்குக் கட்டாயம் என அறிவிப்பதை உச்ச நீதிமன்றம் எதிர்த்தாலும் அதனை மத்திய அரசு காதில் போட்டுக் கொள்கின்றதா என்பது தெரியவில்லை. இன்று உச்சநீதிமன்றம் இணைப்பு தேவையில்லை என்றால் நாளை அதுவே வேறு காரணங்களுக்காக இணைப்பினை செய்ய வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் இனி காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்யும் போதும் ஆதார் மற்றும் பான் இணைப்புக் கட்டாயம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
ஐஆர்டிஏ
பொதுவாக எல்லா ஆயுள் காப்பீடு திட்டங்கள் மற்றும் மருத்துவக் காப்பீடு திட்டங்கள் போன்வரை வாங்கும் போது பான் எண் மாற்றும் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்று ஐஆர்டிஏ தெரிவித்துள்ளது.
நிதி பரிவர்த்தனைகள்
பண மோசடி சட்டத்தின் கீழ் இந்தியாவில் அனைத்து நிதி சார்ந்த சேவைளைப் பெறவும் பான் எண் மற்றும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டு வருகின்றது.
உச்ச நீதிமன்றம்
ஒரு பக்கம் தனிப்பட்ட ஒரு நபரின் அடிப்படை உரிமையினைப் பாதிக்கக் கூடாது, ஆதார் இணைப்பினை செய்யவில்லை என்றால் வங்கி கணக்குச் சேவையினை நிறுத்தக் கூடாது, மொபைல் எண் சேவையினை நிறுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறுகின்றது.
அடையாள ஆவணம்
ஏற்கனவே இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் ஆதார் கார்டினை அடையாள ஆவணமாகப் பெற்று வருகின்றன. அதிலும் எண்டோவ்மெண்ட் திட்டங்கள் போன்றவை முதிர்வடைந்தால் ஆதார் சரிபார்ப்பிற்குப் பிறகே பணம் கிடைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
காப்பீடு நிறுவனங்கள்
இதனால் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்யும் ஆர்வம் வாடிக்கையாளர்களிடம் குறையும் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்காக இந்தியாவில் காப்பீடு சேவை அளித்து வரும் நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளில் குறுகிய காலத்தில் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டி உள்ளது.