இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் 30சதவீதத்திற்கும் குறைவான லாபத்தை பெற்று முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லாபம்
செப்டம்பர் காலாண்டில் எஸ்பிஐ வங்கி 2,759 கோடி ரூபாய் வரையிலான லாபத்தை அடையும் என அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வருடத்தை விடவும் செப்டம்பர் காலாண்டில் 37 சதவீதம் குறைவான அளவீட்டை அடைந்துள்ளது.
இக்காலாண்டில் எஸ்பிஐ வங்கி வெறும் 1,581 கோடி ரூபாய் அளவிலான லாபம் மட்டுமே அடைந்துள்ளது.
மொத்த வருமானம்
இக்காலண்டில் எஸ்பிஐ வங்கியின் வருமானத்தின் அளவு 27.3 சதவீதம் வரையில் உயர்ந்து 18,586 கோடி ரூபாய் பெற்றுள்ளது. ஆனால் லாபத்தில் ஏற்ப்பட்ட சரிவு முதலீட்டாளர்களை கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
வராக்கடன்
மேலும் வராக்கடன் அளவு செப்டம்பர் காலாண்டில் 9.97 சதவீதத்தில் இருந்து 9.83 சதவீதமாக குறைந்துள்ளது.
சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களின் வராக்கடன் அளவீடுகள் அதிகரித்து வரும் நிலையில் எஸ்பிஐ வங்கியின் வராக்கடன் கணிசமான அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி
வராக்கடன் அளவில் ஏற்ப்பட்ட கணிசமான சரிவு உள்ளாட்டு முதலீட்டாளர்களுக்கு இவ்வங்கி மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது, இதன் வாயிலாக எஸ்பிஐ வங்கி பங்குகள் காலாண்டு முடிவுகள் வெளியான பின்பு உயர்நவை சந்தித்துள்ளது.
இதன் படி 1.15 மணி அளவில் எஸ்பிஐ பங்கு விலை 3.28 சதவீதம் வரையில் உயர்ந்து 324.25 ரூபாயாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications