இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில ஆண்டுகளாக இஸ்லாமிய வங்கி சேவை துவங்குவது குறித்து விவாதித்து வருகிறது. ஆனால் இதற்கு அனுமதி வழங்கவில்லை என ஆர்டிஐ கேள்விக்குப் பதில் அளித்துள்ளது.
அனைத்துக் குடிமக்களுக்கு வங்கி கணக்கு என்பது பொதுவானது.ஆனால் இஸ்லாமிய வங்கியானது அவர்களது மத வழக்கத்தின் படி வட்டி அளிப்பதில்லை என்பதற்காகத் துவங்கப்பட முடிவு செய்யப்பட்டது ஆகும்.
நீண்ட கால விவாதத்தின் முடிவு
இஸ்லாமிய வங்கியை அறிமுகம் செய்வது குறித்து ஆர்பிஐ மற்றும் மத்திய அரசு இரண்டும் நீண்ட காலம் விவாதித்து அதற்கான முட்வு ஏதும் இல்லை என்ற ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்டகேள்விக்குப் பதில் அளித்துள்ளது.
ஜன் தன் யோஜனா
இஸ்லாமிக் வங்கி அல்லது வட்டி இல்லா வங்கி சேவை பற்றி ஆர்பிஐ வங்கியின் விவரங்கள் பற்றிக் கேள்வி கேட்கப்பட்டது. 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஜன் தன் யோஜனா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரகுராம் ராஜன் கொண்டு வர முயன்ற திட்டம்?
2008-ம் ஆண்டு முதல் நிதி துரையில் வட்டி இல்லா வங்கி சேவையினைக் கொண்டு வர வேண்டும் என்று ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கும். ஆர்பிஐ வங்கிக்கும் நீண்டகாலமாக அழுத்தம் கொடுத்து வந்தார்.
முடிவு எடுக்காத அரசு
2014-ம் ஆண்டுப் பதவிக்கு வந்த நரேந்திர மோடி அரசு தலைமையிலான மத்திய அரசு அனைவருக்குமான இலவச வங்கி கணக்குச் சேவையினை அறிமுகம் செய்தால் கடந்த 4 வருடத்தில் ரகுராம் ராஜன் அழுத்தம் அளித்து வந்த வட்டி இல்லா வங்கி சேவை குறித்து எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்கப்படவில்லை.. ஆனால் இந்தத் திட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு அதிகப் பயன் உண்டு.
அறிக்கை
கடந்த பிப்ரவரிமாதம் மத்திய அரசின் கீழ் வட்டி இல்லா வங்கி கணக்கை அறிமுகம் செய்வது குறித்துச் சட்டம், தொழில்நுட்பம் மற்றும் பிற விதிகள் குறித்துக் குழு அமைத்து ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது.
சிக்கல்
வட்டி இல்லா வங்கி சேவையும் நடப்பு வங்கி சேவையும் வித்தியாசமானவை இதில் அனுபவம் இல்லை என்பதால் முறையாகக் கடன், கேப்பிட்டல் என்பதால் பல வகைப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அரசும் இந்தத் திட்டம் குறித்து எந்த முடிவை மத்திய அரசு எடுக்க விரும்பவில்லை என்பதைத் தெரிவித்துள்ளது.