ஐடியா, வோடபோன் எடுத்த திடீர் முடிவு.. அடுத்த என்ன நடக்கும்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய டெலிகாம் சந்தை தற்போது புதிய மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இதேபோல டெலிகாம் சேவையை அளிக்கத் தேவைப்படும் டவர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மத்தியிலும் தற்போது மாற்றங்கள் நடந்து வருகிறது.

 

இதன் மாற்றத்தின் முதல் அடியே யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக இருப்பது டெலிகாம் சந்தையை அதிரவைத்துள்ளது.

 இணைப்பு

இணைப்பு

ஜியோ வந்த பின் டெலிகாம் சந்தையில் புதிய ஆதிக்கத்தைச் செலுத்தும் வகையில் பிர்லா குழுமத்தின் ஐடியா-உம், பிரிட்டன் நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனத்தின் இந்திய கிளை வோடபோன் இந்தியாவும் இணையத் திட்டமிட்டது.

இந்த இணைப்பின் மூலம் வாடிக்கையாளர் மற்றும் வர்த்தகத்தில் இக்கூட்டணியே நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான உருவெடுக்கும்.

 

விற்பனை

விற்பனை

இந்திய டெலிகாம் வர்த்தகத்தில் 2வது மற்றும் 3வது இடத்தில் இருக்கும் ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனத்தின் டவர் வர்த்தகத்தை முழுமையாக ஏசிடி நிறுவனத்திற்குச் சுமார் 7,850 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது அமெரிக்க டாலர் மதிப்பில் 1.2 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இறுதியான முடிவுகள்
 

இறுதியான முடிவுகள்

ஏடிசி மற்றும் ஐடியா-வோடபோன் இணைடயிலான இந்த முடிவு உறுதியான நிலையில் ஐடியா-வோடபோன் இணைப்பு கடைசிக்கட்ட ஒப்புதலுக்காகக் காத்துகிடக்கிறது. இந்நிறுவனங்களின் இணைப்பு 2018ஆம் ஆண்டுக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணப் பட்டுவாடா

பணப் பட்டுவாடா

ஐடியா-வோடபோன் நிறுவனங்களின் டவர் வர்த்தகத்தை ஏடிசி நிறுவனத்திற்கு விற்பனை செய்வதன் மூலம் ஐடியா 3,850 கோடி ரூபாயும், வோடபோன் 4,000 கோடி ரூபாயும் பெறும்.

இந்த டவர் வர்த்தகத்தில் விற்பனை 2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

 

20,000 டவர்கள்

20,000 டவர்கள்

இந்தியா முழுவதும் ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் சுமார் 20,000 டவர்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கன் டவர் கார்ப்ரேஷன் என்பதன் சுருக்கமே ஏடிசி.

 

 எதற்காக இந்த விற்பனை

எதற்காக இந்த விற்பனை

பொதுவாக டவர் வர்த்தகம் என்பது சற்று கூடுதலான முதலீடும், செலவுகளும் கொண்டு ஒரு பிரிவு. தற்போது இந்திய டெலிகாம் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தில் கட்டணத்தைக் குறைப்பதன் மூலம் அதிக நஷ்டத்தை அடைந்து வரும் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது செலவுகளைக் குறைப்பதன் மூலம் லாபத்தை உயர்த்தும் முயற்சியாக டவர் வர்த்தகத்தை விற்பனை செய்து வருகிறது.

இதன் முதல் படி ஐடியா - வோடாபோன், இனி வரும் காலத்தில் தொடர்ந்து பல முன்னணி டெலிகாம் சேவை நிறுவனங்கள் வைத்திருக்கும் டவர்களையும் விற்பனை செய்யும்.

இது மட்டுமா, இன்னும் பல மாற்றங்கள் நடக்கப்போகிறது. அடுத்துவரும் இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

 

குழப்பத்தில் டெலிகாம் துறை

குழப்பத்தில் டெலிகாம் துறை

<strong>தினந்தோறும் மாற்றம்.. குழப்பத்தில் மூழ்கியுள்ள இந்திய டெலிகாம் நிறுவனங்கள்..!<br /></strong>தினந்தோறும் மாற்றம்.. குழப்பத்தில் மூழ்கியுள்ள இந்திய டெலிகாம் நிறுவனங்கள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Idea and Vodafone India agreed to sell tower business to ATC

Idea and Vodafone India agreed to sell tower business to ATC
Story first published: Monday, November 13, 2017, 12:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X