மத்திய அரசு தொடர்ந்து டிஜிட்டல் பணபரிமாற்றத்திற்கு ஆதரித்து வரும் நிலையில் செப்டம்ர் மாதத்தில் நாட்டின் டிஜிட்டல் பண பரிமாற்றத்தின் அளவு 84 சதவீதம் அதிகரித்துள்ளது.
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட முன்பு ஆதாவது 2016ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில், 2017ஆம் ஆண்டில் டிஜிட்டல் பணபரிமாற்றம் வாயிலாக செய்யப்பட்ட பண பரிமாற்றத்தின் அளவு 84 சதவீதம் வரையில் அதிகரித்து 74,090 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இதன் அளவு 40,130 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாயின்ட் ஆஃப் சேல் மூலம் செய்யப்பட்ட பண பரிமாற்றத்தின் அளவும் 86 சதவீதம் வரையில் உயர்ந்து 37.8 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த வருடம் 20.3 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 2017 வரையிலான காலத்தில் இந்தியா முழுக்க 853 பண அட்டைகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் 3.33 கோடி கார்டுகள் கிரெடிட் கார்டுகளாகவும், 81.98 கார்டுகள் டெபிட் கார்டுகளாகவும் உள்ளது.