இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலகேனி மற்றும் அவரது மனைவி ரோஹினி ஆகியோர் தங்களது சொத்தில் பாதியை அதாவது 1.7 பில்லியன் டாலரை நன்கொடையாக அளித்துள்ளனர்.
கிவிங் பிலெட்ஜ்
பில் கேட்ஸின் மனைவியான மெலின்டா கேட்ஸ் மற்றும் வாரன் பபெட் ஆகியோர் இணைந்து 7 வருடத்திற்கு முன்பு உலகப் பணக்காரர்களைச் சமுக நலத் திட்டத்திற்காக நன்கொடை அளிக்கக் கிவிங் பிலெட்ஜ் என்ற அமைப்பை உருவாக்கினர்.
பில் கேட்ஸ் மற்றும் வாரன் பபெட்
இந்த அமைப்பில் உள்ள பெறும் பகுதி பணம் பில் கேட்ஸ் மற்றும் வாரன் பபெட் ஆகியோர் கொடுத்தது தான். இந்நிலையில் இப்போது நந்தன் நீலகேனி அவர்களும் இணைந்துள்ளார்.
இந்தியர்கள்
இந்த அமைப்பில் தற்போது 21 நாடுகளைச் சேர்ந்த 171பேர் உள்ளனர். இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 4 பேர் இந்த அமைப்பிற்கு நன்கொடை அளித்துள்ளனர். இதில் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம்பிரேம்ஜி, பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிரன் முசம்தார் ஷா, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனமான பிஎன்சி மேனன் ஆகியோர் இதுவரை நன்கொடை அளித்துள்ளது.
தற்போது இவர்களுடன் நந்தன் நிலகேனி மற்றும் அவரது மனைவி ரோஹினி ஆகியோரும் இணைந்துள்ளனர்.
20 வருடங்கள்
நந்தன் நிலகேனி மற்றும் அவரது மனைவி ரோஹினி கடந்த 20 வருடங்களாகப் பல்வேறு நல திட்டங்களுக்கு உதவியுள்ளனர். இதில் குறிப்பாகக் குடிநீர் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கா பல்வேறு உதவிகளைச் செய்துள்ளனர்
பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரான பில்கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். பெங்களூரில் நடந்த முக்கிய நிகழ்ச்சியில் நந்தன் தனது சொத்தின் பாதியை நன்கொடையாக அளிப்பதாகவும் அதனைக் கிவிங் பிலெட்ஜ் அமைப்பிற்கு அளிக்கதாவும் பில்கேட்ஸ் கையில் கொடுத்தார்.