சீனாவின் பொருளாதாரம் இந்தியாவைவிட மிக உயர்ந்ததாக இருந்தாலும், அதன் அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் செழிப்பான ஜனநாயகம் மற்றும் திறந்த பொருளாதாரம். தெளிவான விளிம்பில் உள்ளது. ஆனாலும் இந்தியாவை விடச் சீனாவில் அதிகளவில் தொழில் அதிபர்கள் உருவாகிவருகின்றனர்.
இதற்கு மிகப் பெரிய உதாரணமே அலிபாபா, பைது மற்றும் சியோமி போன்ற நிறுவனங்கள் சில காண்டுகளில் ஜீரோவில் இருந்து கோடிஸ்வரர்கள் ஆனது ஆகும். ஒரு சர்வாதிகார நாடு எப்படி ஒரு ஜனநாயக நாட்டை விடத் தனியார் துறையில் மிகப் பெரிய உயர்த்தின பெற முடியும்?
வளர்ச்சிக்கு உதவும் காரணிகள்
கடந்த 10 ஆண்டுகளில் குறைந்த ஊதியங்கள், மானியங்கள், நிறுவனச் சீர்திருத்தங்கள், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சாதகமான மக்கள்தொகை ஆகியவை சீனாவின் வளர்ச்சிக்குப் பெறும் உதவியாக இருந்துள்ளன. ஆனால் தற்போது தனியார் நிறுவனங்களின் வளர்ச்சியால் சீனாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்தாலும் எதிர்பார்க்கப்பட்ட அளவு இல்லை.
இணையதளப் பயனர்கள்
2013-2016 வரை ஒப்பிட்டுப் பார்த்தால் சீனாவில் இணையதளத்தினைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 71 சதவீதமாக உள்ளது. இதுவே இந்தியாவில் 21 சதவீதமாக உள்ளது. ஸ்மார்ட்போன் வளர்ச்சி இருந்தாலும் நாம் அதிகளவில் இணையதளத்தினைப் பயன்படுத்துவதில்லை என்பதை இது காட்டுகிறது.
இந்திய அரசு
இந்திய அரசு அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர் வரை டிஜிட்டல் பொருளாதாரத்திற்காக முதலீடு செய்ய உள்ளதாக அன்மையில் இந்தியாவின் தொழில் துறை அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். சீனாவின் டிஜிட்டல் பொருளாதாரம் 2016 வரை 3.35 டிரில்லியனாக உள்ளது.
சீன பொருளாதாரம்
இந்த ஆண்டு மட்டும் 18.9 சதவீதம் உயர்ந்துள்ள சீனாவின் பொருளாதாரம் 6.7 சதவீதமாக உள்ளது. இதில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மட்டும் 30.3 சதவீதம் சொந்தம். இது சீனாவின் பொருளாதாரத்தில் 69.9 சதவீத பங்கை வகிக்கின்றது. எனவே பலர் பொருளாதாரத்திற்கு ஒத்துழைக்கும் போது சீன நிறுவனங்களுக்கு இது மிகவும் எளிமையாகி விடுகிறது.
யார் காரணம்?
சீனாவின் பொருளாதாரம் ஒன்றும் முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் அதிகமாகவில்லை. அரசின் ஆதரவின் நிறுவனங்களுக்குக் கிடைக்கிறது.
இந்தியாவை விடச் சீனாவில் பெரும்பாலானோர் தொழில் அதிபர் ஆவதற்குப் பொருளாதாரத்தினைப் பெருக்கவுமே முயற்சி செய்கின்றனர்.
இந்தியாவில் மாற்றம் தேவை
இந்தியாவைப் போலச் சீனாவில் ஏழ்மையான பகுதிகள் இருந்தாளும் இந்தியாவைப் போன்று கருப்பு வெள்ளையாக இல்லை. ஆனால் இந்தியாவில் விரைவில் இதற்கான மாற்றங்கள் இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்தியா
இந்தியாவில் பண மதிப்பு நீக்கம் பெறும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் அரசு பெரிதாகப் பயன் இல்லை என்றாலும் தைரியமாக எடுக்கப்பட்ட முடிவாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அதிகப்படியான நுகர்வோர் இருப்பதால் மட்டும் இந்திய நிறுவனங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அதிகப்படியான தொழில் அதிபர்கள் உருவாக வேண்டும்.