ரோபோக்கள் மற்றும் ஆட்டோமேஷன் போன்ற தொழில்நுட்பங்கள் வருகையாள 2030-ம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் 800 மில்லியன் ஊழியர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோக வாய்ப்புள்ளது. இது இன்றைய உலகளாவிய தொழிலாளர் சக்தியுடன் ஒப்பிடும் போது ஐந்தில் ஒரு பங்குக்குச் சமமாகும்.
46 நாடுகள்
மெக்கின்சி & கோ நிறுவனம் 46 நாடுகளில் நடத்திய ஆய்வில் 800 நபர்களின் வேலை வாய்ப்பு பறிபோக வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.
ஆட்டோமேஷன்
வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் தான் இதில் பெறும் அளவில் பாதிக்கப்படப் போகிறார்கள் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மெஷின் ஆப்ரேட்டர்கள், ஃபாஸ்ட் ஃபுட் ஊழியர்கள் மற்றும் பேக் ஆப்பிஸ் ஊழியர்களின் பணிகள் ஆட்டோமேஷனால் பெறும் அளவில் பாதிக்கப்பட இருக்கிறது.
புதிய திறன்களை வளர்த்துக்கொள்தல்
ரோபோக்கள் ஒரு பக்கம் வேலை வாய்ப்பினை பிடுங்கி செல்லும் என்றும் கூறி வரும் நிலையில் ஆட்டோமேஷனல் 40 கோடி ஊழியர்களின் வேலை வாய்ப்புகள் அடுத்த 13 வருடத்தில் காணாமல் போய்விடும் என்றும் கூறுகின்றனர்.
நற்செய்தி
ஒரு பக்கம் வேலை வாய்ப்புகள் பரி போகும் நிலையில் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ளும் போது புதிய வேலை வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஹெல்த்கேர், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தோட்டக்காரர்கள் போன்ற பணிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.