டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையினை ஊக்குவிக்க இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் விரவில் ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் கவுண்டர்களில் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையினை வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் அறிமுகம் செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பினை ரயில்வே போர்டு உறுப்பினரான முகமது ஜம்சேத் டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
யூபிஐ
தற்போது யூபிஐ சேவை மூலமாக ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் கட்டண செலுத்துவது கவுண்டர்களில் மட்டும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
ரொக்க பணப் பரிவர்த்தனை
ரயில் டிக்கெட் கவுட்டர்களில் டிக்கெட் புக் செய்ய வருபவர்களில் 97 சதவீதத்தினர் ரொக்க பணப் பரிவர்த்தனை மூலமாகவே பரிவர்த்தனை செய்கின்றனர், 2 முதல் 3 சதவீதத்தினர் மட்டுமே டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
புக் செய்யப்படும் டிக்கெட் எண்ணிக்கை
தினமும் 7.5 லட்சம் டிக்கெட்கள் புக் செய்யப்படுவதாகவும், அதில் டிக்கெட் கவுண்டர்களில் புக் செய்வதன் எண்ணிக்கை 5 லட்சம் என்றும் ரயில்வே நிர்வாகம் கூறுகிறது.
கிரெட்ட்/டெபிட் கார்டு
தற்போது ரயில் பயணிகள் டிக்கெட் புக் செய்யும் போது கிரெட்ட்/டெபிட் கார்டுகள் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தங்களது மொபைல் போனில் பிம் செயலி இருந்தால் போதும் கட்டணம் செலுத்திவிடலாம்.
பாரத் QR குறியீடு
ரயில்வே நிர்வாகம் பாரத் QR குறியீடு ஒன்றை உருவாக்கி வருவதாகவும் இதனால் டிக்கெட் புக் செய்த பிறகு இதனை ஸ்கான் செய்து எளிதாக டிக்கெட் கட்டணத்தினைச் செலுத்திவிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்
ரயில்வே நிர்வாகத்திற்கு ரிசர்வேஷன் டிக்கெட் புக்கிங் சேவை அளிப்பதன் மூலம் தினமும் 110 கோடி ரூபாய் வருவாய்க் கிடைக்கிறது, அதில் 80 கோடி இ-டிக்கெட் மூலமாகவும், 30 கோடி ரூபாய் டிக்கெட் கவுண்டர்கள் மூலமாகவும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications