டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையினை ஊக்குவிக்க இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் விரவில் ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் கவுண்டர்களில் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையினை வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் அறிமுகம் செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பினை ரயில்வே போர்டு உறுப்பினரான முகமது ஜம்சேத் டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
யூபிஐ
தற்போது யூபிஐ சேவை மூலமாக ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் கட்டண செலுத்துவது கவுண்டர்களில் மட்டும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
ரொக்க பணப் பரிவர்த்தனை
ரயில் டிக்கெட் கவுட்டர்களில் டிக்கெட் புக் செய்ய வருபவர்களில் 97 சதவீதத்தினர் ரொக்க பணப் பரிவர்த்தனை மூலமாகவே பரிவர்த்தனை செய்கின்றனர், 2 முதல் 3 சதவீதத்தினர் மட்டுமே டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
புக் செய்யப்படும் டிக்கெட் எண்ணிக்கை
தினமும் 7.5 லட்சம் டிக்கெட்கள் புக் செய்யப்படுவதாகவும், அதில் டிக்கெட் கவுண்டர்களில் புக் செய்வதன் எண்ணிக்கை 5 லட்சம் என்றும் ரயில்வே நிர்வாகம் கூறுகிறது.
கிரெட்ட்/டெபிட் கார்டு
தற்போது ரயில் பயணிகள் டிக்கெட் புக் செய்யும் போது கிரெட்ட்/டெபிட் கார்டுகள் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தங்களது மொபைல் போனில் பிம் செயலி இருந்தால் போதும் கட்டணம் செலுத்திவிடலாம்.
பாரத் QR குறியீடு
ரயில்வே நிர்வாகம் பாரத் QR குறியீடு ஒன்றை உருவாக்கி வருவதாகவும் இதனால் டிக்கெட் புக் செய்த பிறகு இதனை ஸ்கான் செய்து எளிதாக டிக்கெட் கட்டணத்தினைச் செலுத்திவிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்
ரயில்வே நிர்வாகத்திற்கு ரிசர்வேஷன் டிக்கெட் புக்கிங் சேவை அளிப்பதன் மூலம் தினமும் 110 கோடி ரூபாய் வருவாய்க் கிடைக்கிறது, அதில் 80 கோடி இ-டிக்கெட் மூலமாகவும், 30 கோடி ரூபாய் டிக்கெட் கவுண்டர்கள் மூலமாகவும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.