நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து விஷால் சிக்கா வெளியேறிய நிலையில் இப்பதவியில் புதிதாக ஒருவரை நியமிக்கும் பணியில் இன்போசிஸ் நிர்வாகம் ஈடுபட்டு இருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் வரையில் தற்போது தற்காலிக சிஇஓவாக இருக்கும் பிரவின் ராவ், முழுநேர சிஇஓவாக இருப்பார் எனக் கருதப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்நிறுவனத்தின் புதிய சிஇஓ பெயரை இன்போசிஸ் வெளியிட்டுள்ளது.
புதிய சீஇஓ
அடுத்த 5 வருடத்திற்குச் சலில் பாரிக் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இன்போசிஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கேப்ஜெமினி
2000ஆம் கேப்ஜெமினியில் சேர்ந்த சலில் பாரிக், தற்போது கேப்ஜெமினி நிர்வாகக் குழுவின் முக்கிய உறுப்பினராக உள்ளார்.
கல்வி
சலில் பாரிக் ஐஐடி பாம்பே கல்லூரியில் ஏரோநாட்டிகள் இன்ஜினியரிங், கார்ன்வெல் பல்கலைகழகத்தில் மெக்கானிக்கள் இன்ஜினியரிங் மற்றும் கம்பியூட்டர் சயின்ஸ் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்.
இன்போசிஸ் அதிகாரிகள்
இன்போசிஸ் நிர்வாகம் கடந்த முறை புதிதாக ஒருவரை நிறுவனத்தின் தலைவராக நியமித்து பல பிரச்சனைகளை சந்தித்த நிலையில் தற்போது இன்போசிஸ் ஊழியர்களில் ஒருவரைதான் நியமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் புதிதாக ஒரு நபரை நியமித்து அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பங்கு மதிப்பு
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குமதிப்பு 960 ரூபாய் என்ற அளவை அடைந்தது. திங்கட்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் மீது கூடுதல் முதலீடு உடன் மீண்டும் இதன் மதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.