இந்தியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் பொருளாதார வல்லுனரான மன்மோகன் சிங் செப்டம்பர் காலாண்டில் நாட்டின் ஜிடிபி உயர்ந்துள்ளது மகிழ்ச்சி என்றாலும், இது தொடருமா என்றால் சந்தேகம் தான். காரணம் கடந்த 5 காலாண்டுகளாகத் தொடர்ந்து சரிந்து வந்த ஜிடிபி முதல் முறையாக உயர்ந்துள்ள காரணத்தால் எச்சரிக்கையுடனே இருக்க வேண்டும் என மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இதை உங்களால் செய்யமுடியாது.. என மோடிக்குச் சவால் விட்டார் மன்மோகன்சிங்.
வளர்ச்சி விகிதம்..
இந்திய பொருளாதாரம் தற்போது இருக்கும் நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் 10 வருட வளர்ச்சி விகிதத்தின் சராசரி அளவைக் கண்டிப்பாக எட்ட முடியாது எனவும் கூறியுள்ளார் மன்மோகன் சிங்.
முழுமையான தகவல்கள்
மத்திய புள்ளியியல் அலுவலகத்தில் அதிகாரிகள், இந்திய பொருளாதாரத்தில் 30 சதவீதம் வரையில் ஆதிக்கம் செலுத்தும் வகைப்படுத்தப்பட்ட துறை மீதான ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த பாதிப்புகளை முழுமையாகக் கணக்கிடவில்லை எனப் பல பொருளாதார வல்லுனர்கள் கூறுவதாகவும் மன்மோகன் தெரிவித்தார்.
7.1 சதவீத வளர்ச்சி மட்டுமே
நாட்டின் ஜிடிபி வளர்ச்சியில் ஸ்திரமான முடிவுகளை எடுக்க முடியாமல் இருக்கும் நிலையில், 2017-18ஆம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கியின் கணிப்புகள் படியே 6.7 சதவீத வளர்ச்சியை அடைந்தாலும், மோடியின் 4 வருட ஆட்சியில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியின் சராசரி அளவு 7.1 சதவீதமாகவே உள்ளது எனவும் மன்கோகன் சிங் கூறினார்.
காங்கிரஸ்
இதன் மூலம் காங்கிரஸ் ஆட்சியின் 10 வருடச் சராசரி அளவை கூட மோடி அரசால் அடைய முடியாது என மன்மோகன் சிங் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
10 ஆண்டுகள்
யுபிஏ ஆட்சியின் கீழ் 10 வருடத்தில் இந்திய பொருளாதாரம் சராசரியாக 10.6 சதவீத வளர்ச்சியை அடைந்திருந்தது. வெளிப்படையாகப் பேசினால் இதனைக் கண்டிப்பாக மோடியின் இந்த 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் செய்ய முடியாது என்றார் மன்மோகன் சிங்.
இண்டிகோ
எல்பிஜி
ஜிஎஸ்டி பட்ஜெட்


Click it and Unblock the Notifications