வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் ஸ்மார்ட்சிட்டிகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டு வரும் நிலையில், ஹைப்பர்லோக்கல் சேவைகளும் நாளுக்குநாள் இந்தியாவில் வளர்ந்து வருகிறது. மேற்கத்திய நாடுகளில் இத்தகைய சேவைகள் பிரபலமாக இருக்கும் பட்சத்தில் இந்தியாவில் இதேபோன்ற சேவையை அளித்து வருகிறது டன்சோ.
இந்த நிறுவனத்தின் பெயர் பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை என்றாலும், வர்த்தகச் சந்தையில் இன்றைய தலைப்பு செய்தியே டன்சோ தான்.
கூகிள்
இந்தியாவில் இதுவரை ஏந்தொரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திலும் முதலீடு செய்யாமல் இருந்த கூகிள் நிறுவனம் முதல் முறையாக டன்சோ நிறுவனத்தின் மீது ஆர்வம் கொண்டு சுமார் 12 மில்லியன் டாலர் வரையிலான முதலீட்டைச் செய்துள்ளது.
இந்த முதலீட்டுக்கு டன்சோ நிறுவனத்தின் சிறிய அளவிலான பங்குகளைக் கூகிள் பெறுகிறது.
நேரடி முதலீடு..
கூகிள் நிறுவனம் இந்தியாவில் Launchpad Accelerator என்ற திட்டத்தின் மூலம் பல நிறுவனங்களில் முதலீடும், இணைப்பும் உதவியும் செய்துள்ள நிலையில், நேரடியாக முதலீட்டில் இறங்கவில்லை.
பிப்ரவரி 2017
ஆனால் பிப்ரவரி 2017 முதல் கூகிள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கையகப்படுத்தவும், முதலீடு செய்யவும் முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வந்தது. இதன் வாயிலாகவே தற்போது கூகிள் நிறுவனம் நேரடி முதலீடாக டன்சோ நிறுவனத்தில் 12 மில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்துள்ளது.
பெங்களுரூ நிறுவனம்
2015ஆம் ஆண்டுப் பெங்களூரில் அன்கூர் அகர்வால், தால்வீர் சூரி, முகுந்த் ஜா மற்றும் கமபீர் பிஸ்வாஸ் ஆகியோரால் டன்சோ உருவாக்கப்பட்டுத் தற்போது பெங்களூரு வாடிக்கையாளர்களை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது
விரிவாக்கத் திட்டம்..
இப்புதிய முதலீடு உடன் டன்சோ நிறுவனம் பெங்களூரை தொடர்ந்து இந்தியாவில் 5 அல்லது 6 முக்கிய நகரங்களில் தனது சேவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இலக்கு..
தற்போது ஒரு மாதத்திற்கு 1 லட்சம் பரிமாற்றங்கள் செய்து வரும் நிலையில், விரிவாக்கத்தின் மூலம் 2018ஆம் ஆண்டுக்குள் ஒரு நாளுக்கு 1 லட்சம் பிரிமாற்றங்கள் வரையில் நிகழ்த்த இலக்கை நிர்ணயம் செய்துள்ளது டன்சோ நிறுவனம்.
முக்கியத் திட்டம்..
டன்சோ நிறுவனத்தில் ஏற்கனவே ப்ளூம் வென்சர்ஸ், அஸ்பாடா போன்ற முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தாலும், கூகிள் நிறுவனம் நெக்ஸ்ட் பில்லியன் யூசர்ஸ் பிரிவின் கீழ் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகக் கூகிள் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க



Click it and Unblock the Notifications