நவம்பர் மாதம் வரையிலான காலத்தில் நேரடி வரி வசூல் 14.4 சதவீதம் உயர்ந்து 4.8 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இதன் அளவு 14.4 சதவீதம் அதிகரித்துக் காணப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
2017-18ஆம் நிதியாண்டில் மத்திய அரசு நிர்ணயம் செய்த இலக்கான 9.8 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரி வசூலில் 49 சதவீதத்தை அளவீட்டை அடைந்துள்ளது.
இலக்கு
அரசின் இலக்கில் வெறும் 50 சதவீத இலக்கை மட்டுமே அடைந்துள்ளது, கடந்த 8 மாதத்தில் 49 சதவீதம் மட்டுமே அடைந்துள்ளள நிலையில் மீதமுள்ள காலத்தில் முழுமையான அளவீட்டை அடையுமா என்பது தற்போதைய நிலையில் சந்தேகமாகவே உள்ளது.
மொத்த வரி வசூல்
கடந்த வருடமும் இதேகாலக்கட்டத்தில் இலக்கில் 48.7 சதவீதம் மட்டும் நேரடி வரி வசூலில் அடைந்திருந்தது. 2017-18ஆம் நிதியாண்டில் வசூல் செய்யப்பட்ட நிகர நேரடி வரி வசூலில் அளவு கடந்த வருடத்தை விட 10.7 சதவீதம் அதிகரித்து 5.82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
வரி திரும்புதல்..
2017ஆம் ஆண்டில் ஏப்ரல் - நவம்பர் வரையிலான காலத்தில் வரி திரும்பப் பெறுதல் மூலம் சுமார் 1.02 கோடி ரூபாய் அளவிலான தொகை வரி செலுத்துபவர்களுக்குத் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.
நேரடி வரி
மோடி தலைமையிலான மத்திய அரசு மறைமுக வரியை முழுமையாக மாற்றிய அமைத்துள்ள நிலையில், தற்போது நேரடி வரி விதிப்பை முழுமையாக மாற்றத் திட்டமிடப்பட்டு வருகிறது.
மோடி அதிரடி..