மொபைல் போன் மற்றும் பிற டெலிகாம் நெட்வொர்க் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனத்தில் இருந்து தலைமை இயக்க அதிகாரியான மோனிகா மவ்ரே வெளியேறுவதாகத் திங்கட்கிழமை நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோக்கியா டிரான்ஃபர்மேஷனின் மூத்த துணை தலைவராக உள்ள ஜோர்கர் எர்லேமியேர் புதிய தலைமை இயக்க அதிகாரியா செயல்படுவார் என்றும் நோக்கியா நிறுவனம் கூறியுள்ளது.
நிறுவனத்தினை விட்டு வெளியேறினாலும் மோனிகா மவ்ரே தொடர்ந்து தனது ஆலோசனையையும் ஆதரவாயும் நோக்கியா நிறுவனத்திற்கு அளிப்பார் என்றும், தனது வழக்கை தரத்தினை உயர்த்துவதற்காகவே நோக்கியா விட்டு வேறு பணியில் சேர இவர் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தலைமை இயக்க அதிகாரி பதவிக்கு வந்த 8 மாதங்களில் நோக்கியா நிறுவனத்தனை விட்டு மோனிகா மவ்ரே வெளியேறுவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாகவே நோக்கியா நிறுவனம் டெலிகாம் சந்தையில் மிக மோசமான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.