டாடா குழுமத்தின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மூலப் பொருட்கள் விலை உயர்வால் வருகின்ற ஜனவரி 2018-ம் ஆண்டு முதல் தங்களது கார்களின் விலையினை 25,000 ரூபாய் வரை உயர்த்த இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன தயாரிப்பின் தலைவரான மாயன்க் பாரிக் மூலப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் பல்வேறு வெளிப்புற பொருளாதாரக் காரணங்களால் விலை உயர்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.
டாடா கார்கள்
டியாகோ, ஹெக்சா, டிகார் மற்றும் அன்மையில் வெளியிட்ட நெக்சான் போன்ற கார் ரகங்களின் விற்பனையினை அதிகரிக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அது மட்டும் இல்லாமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2018 ஜனவரி மாதம் முதல் தங்களது வாகனங்களின் விலையினை 25,000 ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.
டொயோட்டா
2018 ஜனவரி முதல் டொயோட்டா நிறுவனமும் தனது கார்களின் விலையினை 3 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதால், 5000 முதல் 1.1 லட்சம் ரூபாய் வரை டொயாட்டா கார்களின் விலை உயர வாய்ப்புள்ளது.
மகேந்திரா
மகேந்திரா நிறுவனமும் ஜனவரி மாதம் தங்கள் தயாரித்து விற்பனை செய்து வரும் கார்களின் விலையினை 7,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.