விவிஐபிகளுக்காக 2 விமானத்தை மறுசீரமைப்புச் செய்ய 1100 கோடி கடன் வேண்டும்: ஏர் இந்தியா

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பணிகள் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா விவிஐபிக்களின் பயணங்களுக்கு ஏதுவாக இருக்க 2 போயிங் விமானங்களை மறுசீரமைப்புச் செய்ய 1,100 கோடி ரூபாய் கடனை ஏர் இந்தியா கேட்டுள்ளது.

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

ஏற்கனவே ஏர் இந்தியா நிறுவனம் அதிகளவிலான கடனில் இயங்கி வரும் நிலையில், விமான மறுசீரமைப்பிற்காக 1100 கோடி ரூபாய் கடனை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 2 போயிங் விமானங்கள்

2 போயிங் விமானங்கள்

ஜனவரி 2018இல் 2 போயிங் 777-300ER ரக விமானங்கள் ஏர் இந்தியாவிற்கு டெலிவரி ஆகிறது. இதை விவிஐபி பயணங்களுக்காகப் பயன்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், அதற்கேற்றார் போல் மாற்றி அமைக்க 180 மில்லியன் டாலர் நிதி தேவைப்படுகிறது.

இது இந்திய ரூபாய் மதிப்பில் 1,160 கோடி ரூபாய்.

 

 3 தலைவர்கள்

3 தலைவர்கள்

இந்திய விமானங்கள் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரின் பயணங்களுக்கு மட்டும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரவாதம்

உத்தரவாதம்

இந்தக் கடனுக்கு இந்திய அரசு உத்தரவு அளிப்பதாகவும் கடந்த வாரம் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தவணை

தவணை

இந்த நிதியை முதல்கட்டமாக 135 மில்லியன் டாலரையும், பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் 15 மில்லியன் டாலர் விதம் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+