அமெரிக்கச் சந்தைக்குப் போட்டியாக வளைகுடா நாடுகள் கச்சா எண்ணெயை அதிகளவில் உற்பத்தி செய்து வர்த்தகச் சந்தைக்குக் கொண்டு வந்த காரணத்தால் கடந்த 2 வருடத்தில் இதன் விலை மளமளவெனச் சரிந்தது. இதன் காரணமாக ஏப்ரல் 2016இல் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 38.99 டாலர் என்ற குறைவான விலையை அடைந்தது.
இந்நிலையில் வளைகுடா நாடுகள் அதிகளவிலான வருமானத்தை இழந்து நிதிநெருக்கடியில் சிக்கியது. தற்போது நிதி தேவைக்காகக் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ளதால் இதன் விலையை மீண்டும் உயர துவங்கியுள்ளது.
2 வருட உயர்வு
இன்றைய வர்த்தகத்தில் ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 65.54 டாலர் வரையில் உயர்ந்து 2 வருட உயர்வை அடைந்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகள் இனி வரும் காலத்தில் அதிகளவிலான வருமானத்தைப் பெறும். ஆனால் இந்தியாவில்...
இந்தியா
கச்சா எண்ணெய் இறக்குமதியை மட்டுமே நம்பி இருக்கும் இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் அபாயம் நிலவுகிறது.
வரி..
கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை உயர்த்தி இதன் லாபத்தை மக்களுக்கு அளிக்காமல் அதிக வருவாய்ப் பெற்றது.
தற்போது சர்வதேச சந்தையிலேயே விலை உயர்ந்த காரணத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்ற அச்சம் நிலவுகிறது.
தட்டுப்பாடு
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் (OPEC) மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளதால், சந்தையில் செயற்கையாகத் தட்டுப்பாட்டை உருவாக்கி அதன் மூலம் கச்சா எண்ணெய் விலை தற்போது உயர்ந்து வருகிறது.
ஆராம்கோ
OPEC அமைப்பில் இருக்கும் முக்கியமான உற்பத்தி நாடான சவுதி அரசின் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஆராம்கோ பங்குச்சந்தையில் குதிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 100 பில்லியன் டாலர் வரையிலான நிதியைத் திரட்ட திட்டமிட்டுள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் மூலம் தனது இலக்கை அடைய முடிவு செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications