விராட் கோஹ்லி, அனுஷ்கா இடையிலான காதல் முறிந்துவிட்டது எனச் செய்திகள் வந்த நிலையில், சைலென்டாகக் கல்யாணத்தை முடித்து ரசிர்களுக்கு அதிர்ச்சியை அளித்தனர் விருஷ்கா தம்பதியினர்.
அனுஷ்கா வந்த நேரமோ என்னமோ கோஹ்லி ராசியாகிவிட்டது.
200 கோடி ரூபாய்..
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சம்பளத்திற்காக ஒதுக்கப்பட்டு இருக்கும் நிதியைக் கூடுதலாக 200 கோடி ரூபாய் வரை உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பு படி நிர்வாக அமைப்பு ஒரு அமைக்கப்பட்டு இதற்கான ஆய்வுகள் துவங்கப்பட்டுள்ளது.
இரட்டிப்புச் சம்பளம்
இதன் மூலம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விளையாடும் மூத்த வீரர்களின் சம்பம்ல இரட்டிப்பு ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் நிதி..
இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குத் தற்போது சம்பளத்திற்காக 180 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை 380 கோடி ரூபாய் வரையில் உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தொகையைச் சீனியர் மற்றும் ஜூனியர்கள் அணி மத்தியில் எப்படிப் பிரித்துக் கொடுக்கப்படும் என்பதை நிர்வாக அமைப்பு முடிவு செய்தும்.
யாருக்கு லாபம்..
இப்புதிய நிதி ஒதுக்கீடு மூலம் விராட் கோஹ்லி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோருக்கு அதிகளவிலான சம்பளம் கிடைக்கும். மேலும் இருவரும் ஏற்கனவே தங்களது சம்பளத்தை உயர்த்தக் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
26 சதவீதம் வருமானம்..
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர வருவாயில் வெறும் 26 சதவீதம் மட்டுமே விளையாட்டு வீரர்ரகளுக்குச் செலவிடப்படுகிறது.
இதில் இண்டர்நேஷ்னல் விளையாட்டு வீரர்ரகளுக்கு 13 சதவீத தொகையும், உள்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு 10.6 சதவீதமும், பெண்கள் மற்றும் ஜூனியர் அணி வீரர்களுக்கு 2.4 சதவீதமும் செலவிடப்படுகிறது.
விராட் கோஹ்லி
2017ஆம் ஆண்டில் 46 போட்டிகளில் விளையாடிய விராட் கோஹ்லிக்கு 5.51 கோடி ரூபாய் பெற்றார், இப்புதிய நிதிஒதுக்கீடு மூலம் இந்தத் தொகை 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை கிடைக்கும். இது விராட் கோஹ்லி ரேக் வரிசையில் இருக்கும் அனைவருக்கும் இந்த உயர்வு கிடைக்கும்.
ரஞ்சி டிராபி
இதேபோல் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்குத் தற்போது கிடைக்கும் 12 முதல் 15 லட்சம் ரூபாயில் இருந்து 30 லட்சம் ரூபாய் வரையில் உயரும்.
ஓரே அளவீடு
மேலும் இண்டர்நேஷன்ல் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்களைப் போலவே 100 சதவீத சம்பள உயர்வு உள்நாட்டுப் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கும் கிடைக்கும்.
சொத்து மதிப்பு