பிரதமர் மோடி பணமதிப்பிழப்புக்குப் பின் மக்களின் பணப்புழக்கத்தைச் சீராக்கும் பொருட்டு 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டது. இதற்காக அரசு 5,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாநில நிதியமைச்சக பி.ராதாகிருஷ்ணன் அளிக்க எழுத்துப்பூர்வமான பதிலில் டிசம்பர் 8 வரையில் அச்சிடப்பட்ட 500 ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் 1,695.7 கோடி நோட்டுகள் அச்சிடப்பட்டது.
இந்நிலையில் இதற்காகச் செலவிடப்பட்ட தொகை மட்டும் 4,968.84 கோடி ரூபாய் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில் 365.4 கோடி 2000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது. இதற்காகச் செலவிடப்பட்ட தொகை 1,293.6 கோடி ரூபாய் எனப் பதிலில் குறிப்பிடப்பட்டது.
மேலும் 200 ரூபாய் நோட்டுகளில் 178 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது, இதற்காக 522.83 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.