பொதுவாக இந்திய நுகர்வோர் சந்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வர்த்தக இலக்கு என்றே சொல்லவேண்டும். அதிலும் குறிப்பாக ஆட்டோமொபைல் சந்தையை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு வருடமும் பயணிகள் வாகனங்களைத் தயாரிக்கும் புதுப்புது நிறுவனங்கள் வந்துகொண்டே இருக்கிறது.
ஆனால் 3 நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து வெற்றி பெற்று, இந்திய கார் விற்பனை சந்தையில் 74 சதவீதத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
வளர்ச்சி
இந்த 3 நிறுவனங்களின் சந்தை ஆதிக்கம் 2012-13ஆம் நிதியாண்டுகளில் 65.6 சதவீதமாக இருந்த நிலையில், பல புதிய மாடல்கள், வடிவங்களைப் பல நிறுவனங்கள் அறிமுகம் செய்தாலும் மக்களின் ஆதரவுடன் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதன் மூலம் 2017-18ஆம் நிதியாண்டில் இந்த 3 நிறுவனங்களின் சந்தை ஆதிக்கம் 74 சதவீதமாக உயர்ந்துள்ளது.
15 முன்னணி நிறுவனங்கள்
இந்தியாவில் 25க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் கார்கள் விற்பனை செய்யப்பட்டாலும், 15 நிறுவனங்கள் மட்டுமே பெரிய அளவிலான கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
இதில் 6 நிறுவனங்கள் மட்டுமே கடந்த 5 வருட காலகட்டத்தில் விற்பனை அளவுகளைத் தொடர்ந்து உயர்த்தியுள்ளது.
3 நிறுவனங்கள்
இந்திய கார் விற்பனை சந்தையில் மாருதி சுசூகி, ஹூண்டாய், ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் மட்டும் சுமார் 74 சதவீத சந்தையைக் கொண்டுள்ளது.
மாருதி சுசூகி
5 வருட காலத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை அளவு 27.2 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, அதேபோல் சந்தை மதிப்பு 39.5 சதவீதத்தில் இருந்து 47.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2018ஆம் நிதியாண்டில் இது 50.2 சதவீதம் வரையில் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய்
5 வருட காலத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை அளவு 25 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, அதேபோல் சந்தை மதிப்பு 14.4 சதவீதத்தில் இருந்து 16.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஹோண்டா
கடந்த 5 வருட காலத்தில் ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை அளவு 53.2 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, அதேபோல் சந்தை மதிப்பு 2.8 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2018ஆம் நிதியாண்டில் இது 5.5 சதவீதம் வரையில் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
6 நிறுவனங்கள்
2012-13 மற்றும் 2016-17 நிதியாண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் மாருதி சுசூகி, ஹூண்டாய், ஹோண்டா, போர்டு, ரெனால்டு மற்றும் நிஸ்ஸான் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே விற்பனையில் வளர்ச்சி கண்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications