ஜனவரி 31 முதல் இந்த 6 மாநிலங்களில் ஏர்செல் சேவை கிடையாது: டிராய் அதிரடி அறிவிப்பு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய் ஜனவரி 30-ம் தேதியுடன் ஏர்செல் நிறுவனம் 6 மாநிலங்களில் தான் அளித்து வரும் டெலிகாம் சேவையினை நிறுத்தி விடும் என்று கூறியுள்ளது.

இந்த 6 மாநிலங்களிலும் பிற நெட்வொர்க்குடன் போட்டிப்பொர்ரு சேவை வழங்க முடியாததால் ஏர்செல் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் எனவே வாடிக்கையாளர்களை வேறு நெட்வொர்க்குகளுக்கும் மாறுமாறும் கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது.

டிராய்

டிராய்

ஏர்செல் நிறுவன வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் எந்த ஒரு போர்ட் கோரிக்கையினையும் டெலிகாம் நிறுவனங்கள் 2018 மார்ச் 10ம் தேதி வரை நிராகரிக்கக் கூடாது என்றும் டிராய் கூறியுள்ளது.

 மேக்சிஸ்

மேக்சிஸ்

மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏர்செல் நிறுவனம் புதன்கிழமை டிராயிடம் 6 மாநிலங்களின் சேவை உரிமையினைப் புதுப்பிக்காமல் திருப்பி அளிக்க இருப்பதாகக் கூறியதை அடுத்து டிராய் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

 6 மாநிலங்கள்

6 மாநிலங்கள்

எனவே ஏர்செல் சேவை குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ஹிமாச்சல் பிரதேஷ், மத்திய பிரதேசம் மற்றும் உத்திர பிரதேசம் மேற்கு ஆகிய இடங்களில் அளித்து வந்த டெலிகாம் சேவையில் இருந்து ஏர்செல் நிறுவனம் பின் வாங்குகிறது.

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

ஏர்செல் நிறுவனம் இந்த 6 மாநிலங்களிலும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு டெலிகாம் சேவையினை வழங்கி வருகிறது.

ஜியோ

ஜியோ

2016 செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் சேவை துவங்கப்பட்ட பிறகு போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் ஓர் அளவிற்குத் தாக்குப்பிடித்த நிலையில் சிறு நிறுவனங்கள் பல முழுமையாகத் தங்களது சேவையினை நிறுத்தியுள்ளன.

ஆனால் ஏர்செல் நிறுவனம் இந்த 3 இடங்களிலும் வருவாய் குறைவாக இருப்பதாகவும அதனை வைத்துச் சிறப்பான சேவை வழங்க முடியவில்லை என்றும் கூறியுள்ளது.

 

ஆர்காம்

ஆர்காம்

அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனத்துடன் இணைவதில் ஏற்பட்ட தோல்வியில் ஆர்காம் நிறுவனம் டெலிகாம் சேவையினை விட்டு வெளியேறிய நிலையில் ஏர்செல் நிறுவனம் 6 சர்கிள் சேவையினை மட்டும் விட்டுவிட்டு வெளியேறியுள்ளது.

தமிழக வாடிக்கையாளர்கள்

தமிழக வாடிக்கையாளர்கள்

6 சர்கிள் தவிரத் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் ஏர்செல் டெலிகாம் சேவையினைப் பயனப்டுத்துபவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. சேவைத் தொடர்ந்து அளிக்கப்படும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்கு ஏர்செல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த இந்தி..." data-gal-src="http:///img/600x100/2017/12/21-1513846129-scam1.jpg">
மிகப்பெரிய ஊழல்..

மிகப்பெரிய ஊழல்..

<strong>ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய மிகப்பெரிய ஊழல்..</strong>ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய மிகப்பெரிய ஊழல்..

 ஓபி சைனி

ஓபி சைனி

<strong>யார் இந்த ஓபி சைனி? 2ஜி வழக்கிற்கும் இவருக்கும் என்ன சமந்தம்?</strong>யார் இந்த ஓபி சைனி? 2ஜி வழக்கிற்கும் இவருக்கும் என்ன சமந்தம்?

சன் நெட்வொர்க்'

சன் நெட்வொர்க்'

<strong>2ஜி வழக்கு தீர்ப்பை அடுத்து ‘சன் நெட்வொர்க்' பங்குகள் 5% வரை உயர்வு..</strong>2ஜி வழக்கு தீர்ப்பை அடுத்து ‘சன் நெட்வொர்க்' பங்குகள் 5% வரை உயர்வு..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Aircel To Discontinue Operations In Six Circles By January 30

Aircel To Discontinue Operations In Six Circles By January 30
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X