வருகின்ற பிப்ரவரி மாதத்திற்குள் பொதுத் துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா முதற்கட்டமாக 400 ஏடிஎம் மையங்களையும், இரண்டாம் கட்டணமாக 300 ஏடிஎம் மையங்களையும் மூட முடிவு செய்துள்ளது.
ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டாலும் வாடிக்கையாளர்களைப் பாதிக்காதபடி நடைமுறைப்படுத்த இருப்பதாக வங்கி அதிகாரிகள் நமக்குத் தெரிவித்தனர்.
2017 ஏப்ரல் மாதம் வரை 7,807 ஏடிஎம் மையங்கள் பாங்க் ஆப் இந்தியாவிற்கு இருந்தது. தற்போது இதுவே 7,717 ஆகக் குறைந்துள்ள நிலையில் 700 ஏடிஎம் மையங்கள் மூடப்படும் என்பது வாடிக்கையாளர்களைச் சிரமத்தினை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.
வாடிக்கையாளர்கள் குறைவான, லாபம் அளிக்காமல் இயங்கி வரும் ஏடிஎம் மையங்களைக் குறைப்பதனால் செலவுகள் குறையும் என்றும் என்று சில்லறை கடன்களின் பங்குகளிப்பை அதிகரிப்பதன் வாயிலாகக் கடன் தரத்தினை மறுசீரமைக்கப்படும் என்று நம்மிடம் தெரிவித்தனர்.