2018 ஜனவரி முதல் மோட்டார் சைக்கிள் விலையை உயர்த்தும் ஹீரோ மோட்டோகார்ப்..!

இந்தியாவின் மிகப் பெரிய இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டொகார்ப் மூலப்பொருள் விலை உயர்வால் வாகனங்களின் விலையினை 2018 ஜனவரி 1 முதல் உயர்த்த முடிவு செய்துள்ளது.

விலை உயர்வு மட்டும் இல்லாமல் புதிய வாகனங்களையும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

 எவ்வளவு விலை உயர்வு?

எவ்வளவு விலை உயர்வு?

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தங்களது தயாரிப்பின் அணைத்து வாகனங்களின் விலையையும் 400 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வானது வாகனங்களின் மாடல், சந்தையினைப் பொருத்து மாறும் என்றும் கூறப்படுகிறது.

புதிய வாகனங்கள்

புதிய வாகனங்கள்

125 சிசி சூப்பர் ஸ்பெலண்டர், 110 சிசி பேஷன் ப்ரோ மற்றும் 110 சிசி பேஷன் எக்ஸ்பிரோ என இந்த வரத்தில் மட்டும் புதிதாக மூன்று வாகனங்களை ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. புதிய வாகனங்களை அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ளன.

சந்தை மதிப்பு

சந்தை மதிப்பு

புதிய வாகனங்களுடன் இந்த இரண்டு சக்கர வாகனச் சந்தை மதிப்பில் 50 சதவீதத்தினைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

முக்கிய வாகனங்கள்

முக்கிய வாகனங்கள்

100 முதல் 125 சிசி வாகன பிரிவில் ஹீரோ மோட்டொ கார்ப் நிறுவனம் ஸ்பெண்டர், பேஷன், எஃச்எஃப் டீலக்ஸ், கிளாமர் மற்றும் சூப்பர் ஸ்பெலண்ட்ர் அதிகளவில் வாகனங்களை விற்று மிகப் பரிய சந்தையினைத் தன் வசம் வைத்துள்ளது.

புதிய மாடல் வாகனங்களை அறிமுகம் செய்வதன் மூலமாக இந்தப் பிரிவில் தங்களை மேலும் நிலைப்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+