இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் ஆதார் இணைப்பு மற்றும் எரிவாயு சிலிண்டர் மானியத்தில் செய்த மோசடி வெளிவந்துள்ளது.
இந்நிறுவனத்தின் நிர்வாக தலைவராக 12 மாத காலம் பணியற்றிய சஷி அரோரா தனது தவறை ஒப்புக்கொண்டு ஏர்டெல் குழுமத்தை விட்டு முழுமையாக வெளியேறிவிட்டார்.
என்ன பிரச்சனை..?
முறைகேடாக பயன்பாடு..
இந்திய தனிநபர் அடையாள ஆணையம் ஏர்டெல் மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனங்கள் இரண்டும் ஆதார் மின்னணு சரிபார்ப்புச் சேவையினை முறைகேடாகப் பயன்படுத்திக் கோடிக் கணக்கில் பேமெண்ட்ஸ் வங்கி கணக்குகளில் வைத்து இருப்பதாகவும் இது ஏர்டெல் மொபைல் பயனர்களுக்கே தெரியாது.
இடைக்காலத் தடை..
ஏர்டெல் நிறுவனத்திற்கு அதார் மின்னணு சரிபார்ப்பு சேவையில் இருந்து உடனடியாக இடைக்காலத் தடை விதிப்பதாகவும் தெரிவித்தது.
தற்போது அந்த ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கில் உள்ள பணத்தைத் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளது.
மின்னணு ஆதார் அடையாள சரிபார்ப்பு
ஏர்டெல் மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியும் கூட்டு சேர்ந்து ஏர்டெல் சிம் வாங்கும் பயனர்களுக்கு மின்னணு ஆதார் அடையாள சரிபார்ப்பு முறையினைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல் அவர்களின் பெயரில் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கை திறந்து இருப்பது தெரிய வந்தது.
எல்பிஜி மானியம்
பேமண்ட்ஸ் வங்கி சேவை துவங்கி இருந்தால் மட்டும் பரவாயில்லை, எல்பிஜி மானியம் பெறுவதற்கான தேர்வாகவும் ஏர்டெல் பெமெண்ட்ஸ் வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளனர்
மானியம் தொகை
இந்திய தனிநபர் அடையாள ஆணையம், ஏர்டெல் மொபைல் செயலியினை மறு ஆய்வு செய்த போது தான் ஏர்டெல் நிறுவனம் இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.
மானியம் தொகை தங்களது பேமெண்ட்ஸ் வங்கி கணக்கில் இருப்பதே தெரியாமல் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருந்துள்ளனர்.
ஒப்புக்கொண்டது..
ஏர்டெல் மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் மின்னணு ஆதார் சரிபார்ப்பு சேவைக்கு இடைக்காலத் தடை விதித்த பிறகு ஏர்டெல் நிறுவனம் செய்த மோசடியினை ஒப்புக்கொண்டது.