சத்தீஸ்கர் அரசு தனது மாநிலத்தில் புட் பிராசசிங் மையங்களை உருவாக்க 762.80 கோடி ரூபாய் அளவிலான திட்டத்தை வகுத்துள்ளது, இதற்காக இப்பிரிவில் இருக்கும் 3 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
3 நிறுவனங்கள்
762.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படும் இத்திட்டத்திற்குச் சத்தீஸ்கர் அரசு பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட், மனோரமா இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆக்கிரிட் ஸ்னாக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் இறுதியாக ஒப்பந்த செய்யப்பட்டுள்ளது.
ஆலோசனை
சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சர் ராமன் சிங்கின் ராய்பூரில் இருக்கும் அவரது வீட்டின் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆலோசனை செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக இம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு
சத்தீஸ்கர் அரசு 762.80 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் இத்திட்டத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 24,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என ராமன் சிங் கூறியுள்ளார்.
பதஞ்சலி நிறுவனம்
இம்மாநிலத்தில் பீஜெட்லா கிராமத்தில் 671 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகும் விவசாயம் மற்றும் ஹெர்பல் பிராசசிங் மையங்களை 671 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் பதஞ்சலி நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய திட்டம்..
பதஞ்சலி நிறுவனம் பெற்றுள்ள 671 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டம் 500 ஏக்கர் அளவில் சுமார் 2 லட்ச விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
2 நிறுவனங்கள்
இதில் மனோரமா இண்டஸ்ட்ரீஸ் வெண்ணெய் பொருட்களைத் தயாரிக்கத் திட்டத்தை 76 கோடி ரூபாயிலும், அக்ரிட் ஸ்னாக்ஸ் நிறுவனம் ரொட்டி மற்றும் பேக்கரி தயாரிப்பு ஆலையை அமைக்க 15.80 கோடி ரூபாயிலும் நிறுவனத்தைத் துவங்க உள்ளது.