மத்திய அரசு அக்டோபர் மாதம் வங்கிகள் மறு மூலதன திட்டத்திற்காக வழங்க இருப்பதாகக் கூறிய 2.11 லட்சம் கோடி ரூபாயில் 7,500 கோடி ரூபாயினை 6 வங்கிகளுக்கு அருண் ஜேட்லி வழங்கியுள்ளார். இதனை அடுத்து வங்கி பங்குகளின் விலை பல மடங்கு உயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
மறு மூலதன திட்டத்தின் பணம் வழங்கப்பட்டதை வங்கிகள் பங்கு சந்தைக்குத் தக்கல் செய்துள்ள விவரங்கள் மூலம் உறுதி செய்துள்ளன.
வங்கிகள் பட்டியல்
மத்திய அரசு 7,500 கோடி ரூபாயினைப் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, தீனா வங்கி மற்றும் செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவிற்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எதற்காக இந்த மறு மூலதனம்?
வங்கிகள் முதலீடு குறைவு இல்லாமல் சிரமப்படாமல் இருப்பதற்காக வழங்கப்பட்டுள்ளதாக நிதித் துறை சேவைகள் செயலாளர் ராஜிவ் குமார் தெரிவித்தார். அதிகப்படியான கடன் வழங்கி விட்டு அதுவெல்லாம் வராக் கடனாக உள்ளதால் தான் மத்திய அரசு மறு மூலதனத்தினை வங்கிகளுக்கு வழங்குகிறது.
ஐடிபிஐ வங்கி
மத்திய அரசு ஐடிபிஐ வங்கிக்கு 2,729 கோடி ரூபாயினை மறு மூலதன திட்டத்தின் கீழ் வழங்கி வரா கடனால் ஏற்பட்ட சிரமம் இல்லாமல் வங்கி சேவை வழங்குவதற்காக வழங்கியுள்ளது.
பாங்க் ஆப் இந்தியா
மத்திய அரசு பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு 2,2579 கோடி ரூபாயினை மறு மூலதன திட்டத்தின் கீழ் வழங்கி வராக் கடனால் ஏற்பட்ட சிரமம் இல்லாமல் வங்கி சேவை வழங்குவதற்காக வழங்கியுள்ளது.
யூகோ வங்கி
மத்திய அரசு யூகோ வங்கிக்கு 1,375 கோடி ரூபாயினை மறு மூலதன திட்டத்தின் கீழ் வழங்கி வராக் கடனால் ஏற்பட்ட சிரமம் இல்லாமல் வங்கி சேவை வழங்குவதற்காக வழங்கியுள்ளது.
பாங்க் ஆப் மகாராஷ்டிரா
மத்திய அரசு பாங்க் ஆப் மகாராஷ்டிராவிற்கு 650 கோடி ரூபாயினை மறு மூலதன திட்டத்தின் கீழ் வழங்கி வரா கடனால் ஏற்பட்ட சிரமம் இல்லாமல் வங்கி சேவை வழங்குவதற்காக வழங்கியுள்ளது.
செண்ட்ரல் பாங்க்
மத்திய அரசு செண்ட்ரல் பாங்கிற்கு 323 கோடி ரூபாயினை மறு மூலதன திட்டத்தின் கீழ் வழங்கி வரா கடனால் ஏற்பட்ட சிரமம் இல்லாமல் வங்கி சேவை வழங்குவதற்காக வழங்கியுள்ளது.
தீனா வங்கி
மத்திய அரசு தீனா வங்கிக்கு 243 கோடி ரூபாயினை மறு மூலதன திட்டத்தின் கீழ் வழங்கி வரா கடனால் ஏற்பட்ட சிரமம் இல்லாமல் வங்கி சேவை வழங்குவதற்காக வழங்கியுள்ளது.