இந்தியா பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டு பணக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் சூப்பர் ரிச் மக்களின் எண்ணிக்கை 54 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
2012-13ஆம் கணக்கீட்டு ஆண்டு காலத்தில் இந்தியாவில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கை 37,248 ஆக மட்டும் இருந்த நிலையில் 2015-16 கணக்கீட்டு ஆண்டில் இது 57,399 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஒருவர் மட்டுமே 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் பெற்றுள்ளார்.
100கோடிக்கும் அதிகமாக மற்றும் 500 கோடிக்கு குறைவாக வருமானம் பெறும் நபர்களின் எண்ணிக்கை 30 ஆக உள்ளது. 50 -100 கோடி ரூபாய்க்கும் மத்தியில் இருப்போரின் எண்ணிக்கை 58 ஆக உள்ளது.