இந்தியன் ரயில்வேஸ் துவங்கப்பட்டதில் இருந்து நட்டம் மட்டுமே அடைந்து வருவதாகக் கூறி வரும் நிலையில் 2016-2017 நிதி ஆண்டில் டிக்கெட் விற்பனையில் மட்டும் கூடுதலாக 2,000 கோடி ரூபாய் வருவாயினைப் பெற்றுள்ளதாகப் பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி கேட்டபோது பதில் அளித்த மாநிலங்களின் ரயில்வே துறை அமைச்சர் ராஜென் கோஹைன் 2015-2016 நிதி ஆண்டில் இணையதள டிக்கெட் புக்கிங் மூலமாக 17,204.06 கோடி ரூபாய் வசூலித்ததாகவும், ஆப்லைனில் 28,119 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் இதுவே 2016-2017 நிதி ஆண்டில் ஆன்லைன் மூலம் 19,209.28 கோடியும், ஆப்லைன் மூலம் 28,468.81 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
2015-2016 நிதி ஆண்டில் 45,323.93 கோடியாக இருந்த ரயில் டிக்கெட் வருவாயினை விட 2016-2017 நிதி ஆண்டில் 2354.16 கோடி ரூபாய்க் கூடுதலாக ரயில்வே நிர்வாகத்திற்குக் கிடைத்துள்ளது.
நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து முன்பதிவு இல்லாத டிக்கெட் வாங்குவதைக் குறைத்துப் பேப்பர்லஸ் ஆகப் பயணிப்பதற்கான வேலைகளில் மத்திய, மேற்கு, கிழக்கு, தெற்கு, தென் கிழக்கு, தென் மத்திய மற்றும் வடக்கு ரயில்வே நிற்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.