வருகின்ற 2018 ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் 650 கிளைகளுடன் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பாங்க் (IPPB) சேவையினைத் துவங்க உள்ளதாகப் பராளுமன்றத்தில் நேற்று மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்த தகவல் தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்கா சோதனை முயற்சியாக ராய்பூர் (சத்தீஸ்கர்) மற்றும் ராஞ்சி (ஜார்கண்ட்) ஆகிய இரண்டு கிளைகளில் மட்டும் 2017-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் சேவை அளித்து வருவதாகவும் கூறினார்.
நடப்பு நிதி ஆண்டு
எனினும் நடப்பு நிதி ஆண்டில் புதிதாக எந்த ஒரு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கிளைகளைத் துவங்கும் எண்ணமும் இல்லை என்றும் மனோஜ் சின்ஹா குறிப்பிட்டு இருந்தார்.
இந்திய ரிசர்வ் வங்கி
பேமெண்ட்ஸ் வங்கி சேவை அளிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கியானது தபால் துறைக்கு 2017 ஜனவரி 20-ம் தேதி முழுமையான அனுமதி வழங்கியது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவை
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையினை நாடு முழுவதிலும் உள்ள 1.55 லட்சம் தபால் அலுவலகங்களிலும் ஆர்பிஐ வங்கியின் கட்டுப்பாட்டிற்கு இணங்க வங்கி சேவை அளிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையினைப் பொதுத் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷ்னல் வங்கி மற்றும் பஞ்சாப் மெட்லைப் இந்தியாவுடன் இணைந்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா தபால் துறை
ஐபிபிபி வங்கி சேவைக்காக நிறுவனங்கள் சட்டம் 2013-ன் கீழ் 2016-ம் ஆண்டு 17-ம் தேதி பதிவு செய்யப்பட்டு 100 சதவீத பொதுத் துறை நிறுவனமாக இந்தியா தபால் துறை துவங்கியது.