இந்திய மத்திய வங்கி விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டினை சாக்லேட் பழுப்பு நிறத்தில் வெளியிட இருக்கிறது. இதற்காக ஆர்பிஐ வங்கி 1 மில்லியன் நோட்டுகளை அச்சிட்டு இருப்பதாக நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ரூபாய் நோட்டின் பின் பக்கத்தில் கோனார்க் சூரிய கோயில் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு ஆர்பிஐ வங்கி 10 ரூபாய் நோட்டுகளின் வடிவத்தினை 2005-ம் ஆண்டு மாற்றி அமைத்தது.
2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக 200 ரூபாய் நோட்டினை வெளியிட்டது மட்டும் இல்லாமல் புதிய 50 ரூபாய் நோட்டினையும் மகாத்மா காந்தி தொடரின் கீழ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் ஆர்பிஐ வங்கி யூபிஐ போன்ற செயலிகளை வங்கிகள் மூலமாக அறிமுகம் செய்து டிஜிட்டல் பரிவத்தனைகளை ஊக்குவித்தும் வருகிறது.