உலகின் முன்னணி டாக்ஸி நிறுவனமாகத் திகழும் உபர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் சீஇஓவான டிராவிஸ் கலாநிக் ஜூன் மாதத்தில் பல்வேறு காரணங்களுக்காகச் சிஇஓ பதவியில் இருந்தும், நிர்வாகக் குழுவில் இருந்தும் வெளியேறினார்.
இந்நிலையில் உபர் நிறுவனத்தின் தான் வைத்திருந்த பங்கு இருப்பில் 29 சதவீதத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இந்த 29 சதவீத பங்குகளின் மதிப்பு மட்டும் 1.4 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
உபர் நிறுவனத்தில் சாப்ட்பேங்க் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 17.5 சதவீத பங்குகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தப் பங்குகளை இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களிடம் இருந்தும், ஊழியர்களிடம் இருந்தும் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தான் தற்போது டிராவிஸ் தனது பங்குகளை விற்பனை செய்கிறார்.