ஏர் இந்தியா நிறுவனத்தினை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ள அதே நேரம் செலவுகளைக் குறைக்கும் பணியிலும் இறங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக வேறு பணிகளில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு ஏர் இந்தியாவில் பணி செய்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் 400 நபர்களை ஏர் இந்தியா நிறுவனம் பணியை விட்டு நீக்கியுள்ளது.
இந்தப் பணி நீக்கத்தில் சிக்கிய ஊழியர்கள் அனைவரும் தொழில்நுட்ப பிரிவைச் சாராதவர்கள் என ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான பிரதீப் சிங் கரோலா தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கிவிட்டுப் புதிதாக ஓய்வுபெற்ற ஊழியர்களைப் பணிக்கும் எடுக்கவும் ஒப்பந்தங்களைப் போட்டது.
விற்க அனுமதி
2017-ம் ஆண்டு மத்திய அமைச்சகம் ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள அரசின் பங்குகளை விற்க அனுமதி அளித்தது.
பணி நீக்கம்
அதன் ஒரு கட்டமாக ஏர் இந்தியா நிறுவத்தின் நிர்வாக இயக்குனர் தொழில்நுட்ப பிரிவு இல்லாத மற்றும் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஒப்பந்த ஊழியர்களினை உடனடியாகப் பணியைவிட்டு நீக்கி ஜனவரி 5-ம் தேதி உத்தரவிட்டுள்ளது.
யாருக்குப் பாதிப்பில்லை
முக்கியமான பிரிவில் பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்களை நீக்கவில்லை என்றாலும், ஏன் அவர்களை நீக்கவில்லை என்று முறையான காரணத்தினைச் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கூற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
இது குறித்துத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவலின் படி 412 ஊழியர்கள் ஓய்வுபெற்ற பிறகு ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணி செய்து வருவதாகவும் அவர்கள் அனைவரும் நீக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.
துணை நிறுவனங்கள்
இந்த ஊழியர்கள் எண்ணிக்கையானது ஏர் இந்தியாவின் துணை நிறுவனங்களான ஏர் இந்தியா ஏர் திராஸ்போர்ட் சேவைகள், ஏர் இந்தியா சார்ட்டர்ஸ் லிமிடெட், ஏர் லைன் அலைடு சேவைகள் மற்றும் ஏர் இந்தியா எஞ்சினியரிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்களிலும் சேர்த்து எனத் தெரியவந்துள்ளது.
உத்தரவு
ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னால் தலைவரான ராஜிவ் பன்சால் சென்ற ஆகஸ்ட் மாதம் புதிதாக ஓய்வுபெற்றவர்களைத் தற்காலிகமாகப் பணிக்கு எடுப்பதைத் தற்போதைக்கு நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications