ஒருகாலத்தில் இந்திய டெலிகாம் துறையில் ஆதிக்கம் செலுத்திய ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது கடன் நெக்கடியாலும், வர்த்தகப் பிரச்சனைகளாலும் இந்நிறுவனம் முடங்கிப்போய் நிற்கிறது. கடன் நிலுவையைத் தீர்க்கும் காரணமாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் அதன் உரிமையாளர் அனில் அம்பானி விற்று வருகிறார்.
இந்நிலையில் ஆர்காம் நிறுவனத்திடம் 4ஜி சேவை அளிக்க உதவும் 850 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
ஜியோ
ஆர்காம் நிறுவனத்தின் டெலிகாம் டவர் மற்றும் அதன் வர்த்தகத்தை முழுமையாக முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் பிரிவான ஜியோ பெற்றுள்ள நிலையில், இந்த 850 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வாங்க ஜியோ திட்டமிட்டு வருகிறது.
3வது நபர்
அனில் அம்பானி தனது அண்ணனுக்கு ஆர்காம் சொத்துக்களை விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது 850 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்க ஏர்டெல் போட்டி போட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் ஸ்பெக்ட்ரம் இருப்பு அளவுகளில் சில முக்கியத் தளர்வுகளைக் கொண்ட வர உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆர்காம்
அனில் ஆம்பானிக்கு சொந்தமான ஆர்காம் நிறுவனத்தின் இந்தியாவில் 22 வட்டங்களில் பயன்படுத்தும் அளவிற்கு 850 மெகாஹெட்ஸ் ஸ்பெக்டரம் 70 யூனிட்களாக உள்ளது. இதனை 2021 வரையில் பயன்படுத்தவும் உரிமை கொண்டுள்ளது ஆர்காம் இதனை வாங்கவே தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் போட்டி போட்டு வருகிறது.
4000 கோடி ரூபாய்
ஆர்காம் நிறுவனத்திடம் இருக்கும் 850மெகாஹெட்ஸ் அலைக்கற்றை விற்பனை செய்யப்பட்டால் சுமார் 4000 கோடி ரூபாய் ஆர்காம் நிறுவனத்திற்குக் கிடைக்கும்.
டிராய்
செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில் டிராய், டெலிகாம் நிறுவனங்களின் இணைப்பிற்குப் பின், ஒரு நிறுவனம் ஒவ்வொரு பேன்டிலும் 50 சதவீதம் ஸ்பெக்டரம் அலைக்கற்றை வைத்துக்கொள்ளலாம்.
இதேபோல் தனிப்பட்ட நிறுவனத்தின் இருப்பு அளவு 35 சதவீதம் வரை வைத்துக்கொள்ளலாம் என ஆலோசனை செய்துள்ளது. முன்பு இதன் அளவு 25 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னணி நிறுவனங்கள்
டிராய் அமைப்பின் இந்த ஆலோசனை நடைமுறைக்கு வரவில்லை, ஆனால் இது ஒப்புதல் பெற்று அமலாக்கம் செய்யப்பட்டால் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாக்கும். இதனால் சிறு நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான நெருக்கடி உருவாகவும் வாய்ப்புகள் உள்ளது.
இந்தியாவின் பணக்கார மாநிலங்களில்
ஐடி நிறுவனங்களில் மீண்டும் பணிநீக்கம்..
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications