ஆனில் அம்பானி சொத்துக்குப் போட்டிப்போடும் ஏர்டெல், ஜியோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருகாலத்தில் இந்திய டெலிகாம் துறையில் ஆதிக்கம் செலுத்திய ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது கடன் நெக்கடியாலும், வர்த்தகப் பிரச்சனைகளாலும் இந்நிறுவனம் முடங்கிப்போய் நிற்கிறது. கடன் நிலுவையைத் தீர்க்கும் காரணமாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் அதன் உரிமையாளர் அனில் அம்பானி விற்று வருகிறார்.

இந்நிலையில் ஆர்காம் நிறுவனத்திடம் 4ஜி சேவை அளிக்க உதவும் 850 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

ஜியோ

ஜியோ

ஆர்காம் நிறுவனத்தின் டெலிகாம் டவர் மற்றும் அதன் வர்த்தகத்தை முழுமையாக முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் பிரிவான ஜியோ பெற்றுள்ள நிலையில், இந்த 850 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வாங்க ஜியோ திட்டமிட்டு வருகிறது.

 3வது நபர்

3வது நபர்

அனில் அம்பானி தனது அண்ணனுக்கு ஆர்காம் சொத்துக்களை விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது 850 மெகாஹெட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்க ஏர்டெல் போட்டி போட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் ஸ்பெக்ட்ரம் இருப்பு அளவுகளில் சில முக்கியத் தளர்வுகளைக் கொண்ட வர உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

ஆர்காம்

ஆர்காம்

அனில் ஆம்பானிக்கு சொந்தமான ஆர்காம் நிறுவனத்தின் இந்தியாவில் 22 வட்டங்களில் பயன்படுத்தும் அளவிற்கு 850 மெகாஹெட்ஸ் ஸ்பெக்டரம் 70 யூனிட்களாக உள்ளது. இதனை 2021 வரையில் பயன்படுத்தவும் உரிமை கொண்டுள்ளது ஆர்காம் இதனை வாங்கவே தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் போட்டி போட்டு வருகிறது.

4000 கோடி ரூபாய்

4000 கோடி ரூபாய்

ஆர்காம் நிறுவனத்திடம் இருக்கும் 850மெகாஹெட்ஸ் அலைக்கற்றை விற்பனை செய்யப்பட்டால் சுமார் 4000 கோடி ரூபாய் ஆர்காம் நிறுவனத்திற்குக் கிடைக்கும்.

டிராய்

டிராய்

செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில் டிராய், டெலிகாம் நிறுவனங்களின் இணைப்பிற்குப் பின், ஒரு நிறுவனம் ஒவ்வொரு பேன்டிலும் 50 சதவீதம் ஸ்பெக்டரம் அலைக்கற்றை வைத்துக்கொள்ளலாம்.

இதேபோல் தனிப்பட்ட நிறுவனத்தின் இருப்பு அளவு 35 சதவீதம் வரை வைத்துக்கொள்ளலாம் என ஆலோசனை செய்துள்ளது. முன்பு இதன் அளவு 25 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

முன்னணி நிறுவனங்கள்

முன்னணி நிறுவனங்கள்

டிராய் அமைப்பின் இந்த ஆலோசனை நடைமுறைக்கு வரவில்லை, ஆனால் இது ஒப்புதல் பெற்று அமலாக்கம் செய்யப்பட்டால் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாக்கும். இதனால் சிறு நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான நெருக்கடி உருவாகவும் வாய்ப்புகள் உள்ளது.

இந்தியாவின் பணக்கார மாநிலங்களில்

இந்தியாவின் பணக்கார மாநிலங்களில்

<strong>இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு எந்த இடம் தெரியுமா..?</strong>இந்தியாவின் பணக்கார மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு எந்த இடம் தெரியுமா..?

ஐடி நிறுவனங்களில் மீண்டும் பணிநீக்கம்..

ஐடி நிறுவனங்களில் மீண்டும் பணிநீக்கம்..

<strong>ஐடி நிறுவனங்களில் மீண்டும் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!</strong>ஐடி நிறுவனங்களில் மீண்டும் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel, Jio eyes on RCom’s unsold asserts

Airtel, Jio eyes on RCom’s unsold asserts
Story first published: Wednesday, January 10, 2018, 12:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X