பிரதமர் மோடி அரசின் மிகப்பெரிய திட்டமாகப் பார்க்கப்படும் ஸ்மார்ட்சிட்டி திட்டம் அறிவிக்கப்பட்ட போது இந்தியா முழுவதும் படிப்படியாக அடுத்த 10 வருடத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய வல்லரசு நாடுகளைப் போல் மாறிவிடும் என அனைவராலும் நம்பப்படும் வகையில் இத்திட்டம் பேசப்பட்டது.
இத்திடம் அறிவிக்கப்பட்டு இரண்டரை வருடம் முழுமையாக முடிந்துள்ள நிலையில், இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி என்ன தெரியுமா..?
100 ஸ்மார்ட்சிட்டி
இந்தியா முழுவதும் 100 ஸ்மார்ட்சிட்டிகளை அமைப்பது என்று மிகப் பிரம்மாண்டமாக முறையில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், இந்தியா முழுவதும் 3 சுற்றுகளில் ஸ்மார்ட்சிட்டியாக மாற்ற வேண்டும் என 90 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 1.91 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகை 90 நகரங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு.
5 ஆண்டுத் திட்டம்
ஸ்மார்ட்சிட்டி திட்டம் என்பது 5 ஆண்டுத் திட்டம், 2015-16 முதல் 2019-20ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்கு ஒவ்வொரு நிதியாண்டிற்கும் சுமார் 500 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் செலவு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
2.5 வருடம்
ஆனால் இந்த இரண்டரை வருடத்தில் அறிவிக்கப்பட்டு 1.91 லட்சம் கோடி ரூபாயில் இருந்து வெறும் 1.4 சதவீதம் மட்டுமே இந்த 2.5 வருடத்தில் செலவு செய்துள்ளது. மேலும் மொத்த திட்டத்தில் 5.2 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
72 சதவீத திட்டங்கள்
தேர்வு செய்யப்பட்ட 90 நகரங்களில் அறிவிக்கப்பட்ட சுமார் 72 சதவீத திட்டங்கள் இன்னமும் திட்ட வடிவ அறிக்கையைத் தயாரிப்பதிலேயே உள்ளது.
இதில் டெல்லியில் 23 திட்டங்கள், வாரனாசியில் 16 திட்டங்கள், ராய்பூரில் 10 திட்டங்கள் என 90 நகரங்களில் அதிகத் திட்டங்கள் பெற்று இந்த 3 நகரங்கள் தான்.
ஹர்தீப் சிங் பூரி
ஆனால் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்ட அறிக்கையில், 1,35,459 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் பல்வேறு நிலையில் உள்ளதாகவும், 1,872 கோடி ரூபாய் மதிப்பிலான 147 திட்டங்கள் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications