இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் ஸ்டீல் பொன்ற முக்கிய மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் 32,000 ரூபாய் வரை கார்களின் விலையினை உயர்த்தியுள்ளன.
மாருதி சுசூசி
மாருதி சுசூசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதன் வாகனங்களின் விலையில் 1,700 ரூபாய் முதல் 17,000 ரூபாய் வரை மாடல்களைப் பொருத்து உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஹோண்டா
இதே போன்று ஹோண்டா இந்தியா பிரிவின் செய்தி தொடர்பாளரும் ஜனவரி 8ம் தேதி முதல் இந்தியாவில் உற்பத்தி செய்யும் மாடல் கார்களின் விலையினை உயர்த்தியுள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார்.
ஹோண்டா நிறுவன கார்கள் குறைந்தபட்சம் 6,000 ரூபாய் முதல் 32,000 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் அக்கார்டு ஹைபிர்ட் கார்கள் விலையில் மாற்றம் ஏதும் இல்லை.
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே தங்களது கார்களின் விலையினை 25,000 ரூபாய் வரை ஜனவரி 1 முதல் உயர்த்தியுள்ளது.
ஃபோர்டு
ஃபோர்டு நிறுவனமும் தங்களது இந்திய தாயாரிப்பு கார்களின் விலையினை 4 சதவீதம் வரை விலை உயர்த்தியுள்ளது.
பிற நிறுவனங்கள்
பிற கார் நிறுவனங்களான ஹூண்டாய் இந்தியா, மகேந்திரா, ஸ்கோடா, இசுசூ மற்றும் ரெனால்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது கார்களின் விலையினை விரைவில் மாற்றி அமைக்கும் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications