இன்றைய மாடர்ன் உளகில் பங்கு சந்தை மட்டும் தான் அதிக முதலீடு தருகின்றது என்ற எண்ணத்தினை மாற்றிக்கொள்ளுங்கள். பங்கு சந்தையினை விட அதிக லாபம் தரும் முதலீடுகள் என்பது உலகம் முழுவதிலும் உள்ளன.
அப்படி என்ன முதலீடு என்று யோசிப்பவர்களுக்கு நீண்ட காலத்திற்கு இதில் முதலீடு செய்து வந்தால் அதிக லாபம் என்பது மட்டும் நிச்சயம் என்று என்னால் கூற முடியும்.
பல சகாப்தங்கள்
1870-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ஒவ்வொரு நாளும் இதில் முதலீடு செய்து இருந்தால் நமக்குத் தெரியாமலே அது பல மடங்காக உயர்ந்து இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ரியல் எஸ்டேட்
பங்கு சந்தை முதலீடுகள் ரிஸ்க் உடையது, வங்கி டெபாசிட் திட்டங்களில் வட்டி குறைந்து வரும் அதே நேரத்தில் நிலம், வீடு போன்றவற்றினைப் புதிதாக வாங்கி முதலீடு செய்துள்ளவர்கள் 10 அல்லது 20 வருடங்கள் கழித்து விற்க நினைக்கும் போது பல மடங்கு லாபத்தினை அளிக்கிறது.
வீடு வாங்குவது
கமர்ஷியலாக ஒரு இடத்தினை வாங்குவதை விட வீடு போன்றவற்றை வங்கும் போது அதிக லாபம் அளிக்கிறது. ரியல் எஸ்டேட் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக வேகமாக வளர்ந்து வருவது என்றால் அது வீடு மற்றும் நிலம் வாங்குவது தான்.
பங்கு சந்தை
பங்கு சந்தை மற்றும் ஈக்விட்டி சந்தை இரண்டிலும் ஒரே நேரத்தில் முதலீடு செய்தால் வீடு மற்றும் நிலம் வாங்கியிருந்தால் 7.9 சதவீதம் லாபத்தினையும் பங்கு சந்தை போன்றவை 7 சதவீதமும் சராசரியாக லாபம் அளிக்கின்றன என்று நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
இயற்கை பேரழிவுகள்
இயற்கை பேரழிவுகள், போர் போன்றவற்றாலும் இந்தச் சொத்துக்கள் பெரிய அளவில் சேதம் அடைய வாய்ப்பில்லை. அதே நேரம் பண வீக்கம் உயர உயரச் சொத்து மதிப்பானது உயர்ந்துகொண்டே செல்லும்.
பங்கு சந்தை முதலீடுகள் லாபம் அளித்த நாடு
உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இங்கிலாந்தின் பங்கு சந்தை தான் அதிக லாபம் அளித்துள்ளது. அதே நேரம் பிடான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வீடுகள் அதிக லாபம் அளித்துள்ளன.