தேசிய ஓய்வூதிய திட்டமான என்பிஎஸ்-ன் விதிகளில் வீடு வாங்க, மருத்துவச் சேலவுகள் அல்லது குழந்தைகளின் படிப்பு செலவிற்குப் பணத்தினை எடுத்துக்கொள்ளலாம் என ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு ஒன்றைப் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
இதன் மூலமாக என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்து வரும் முதலீட்டலார்கள் மூன்று வருடத்திற்கும் கூடுதலாகத் தொடர்ந்து முதலீடு செய்து வந்திருந்தால் 25 சதவீதம் வரையில் கார்பஸ் பணத்தினைத் திரும்பப் பெற முடியும்.
எத்தனை முறை பணத்தினை இடையில் பெற முடியும்?
முதலீட்டுக் காலத்தில் மொத்தமாக 3 முறை மட்டுமே இதுபோன்ற காரணங்களுக்காகப் பணத்தினை இடையில் திரும்பப் பெற முடியும்.
என்னென்ன செலவுகளுக்குப் பணத்தினைத் திரும்பப் பெற முடியும்?
வீடு வாங்க அல்லது கட்ட, மருத்துவச் சேலவுகள் அல்லது குழந்தைகளின் படிப்புச் செலவு போன்ற குறிப்பிட்ட சில முக்கியமான செலவுகளுக்கு மட்டுமே இந்த 25 சதவீத கார்பஸ் தொகையினைப் பெற முடியும்.
ஜாயிண்ட் கணக்குப் பயனர்கள்
என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்து வருபவர் அல்லது ஜாயிண்ட் கணக்கில் உள்ள ஒருவருக்கு ஏற்கனவே வீடு இருந்தால் வீடு காட்ட அல்லது வாங்கும் காரணங்களின் கீழ் பணத்தினைத் திரும்பப் பெற முடியாது.
மருத்துவச் செலவுகள்
புற்றுநோய், சிறுநீரகச் செயலிழப்பு, இதயப் பைபாஸ் அறுவை சிகிச்சை, இதய வால்வு அறுவை சிகிச்சை மற்றும் பக்கவாதம் போன்ற மருத்துவச் செலவுகளுக்குப் பணத்தினை இடையில் பெற முடியும்.