சென்னை: தபால் அலுவலகம் மூலமாகச் சிறு சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் சேமிப்புக் கணக்கை துவங்குவது கட்டாயம் என ஜனவரி 12-ம் தேதி தபால் துறை அறிவித்து இருந்தது.
முதலில் இதற்கான காலக்கெடு 2018 ஜனவரி 15 ஆக இருந்த நிலையில் அது தற்போது 2018 ஏப்ரல் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பல சிறு சேமிப்பு முதலீட்டாளர்களுக்குத் தபால் அலுவலகத்தில் இருந்து முதிர்வு தொகைக்கான காசோலைகள் வழங்கப்படாமல் சேமிப்பு கணக்குகளைத் துவங்க வைத்து அதன் பின்பே பணத்தினை அளித்து வருகின்றனர்.
ஆனால் இதற்கு முன்பு டைம் டெபாசிட் திட்டங்கள், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரம் போன்றவற்றில் முதலீடு செய்பவர்களுக்கு முதிர்வு தொகையானது செக்குகளாக வழங்கப்படும். அதனை வங்கிகளில் டெபாசிட் செய்து பணத்தினைப் பெற்றுவந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.