இந்தியாவின் நான்காம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான எச்சிஎல் வெள்ளிக்கிழமை டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3ம் காலாண்டிற்கான அறிக்கையினை வெளியிட்டது. அதில் 6% வரையில் நிகர லாபம் அதிகரித்து 2,194 கோடி ரூபாய்ப் பெற்றுள்ளதாக எச்சிஎல் கூறியுள்ளது.
இதே காலாண்டில் ஒரு வருடத்திற்கு முன்பு எச்சிஎல் நிறுவனம் 2,070 கோடி ரூபாய் வருவாயினைப் பெற்றதாக அறிவித்து இருந்தது.
வருவாய்
சென்ற காலாண்டில் எச்சிஎல் நிறுவனத்தின் வருவாய் 8.4 சதவீதம் உயர்ந்து 12,808 கோடி பெற்றதாகவும் இதுவே சென்ற ஆண்டு 11,814 கோடியாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.
முக்கியமான காலாண்டு
நடப்பு காலாண்டின் துவக்கத்தில் நிலையான வளர்ச்சியாகத் தற்போது வரை 3.3 சதவீதம் பெற்றுள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 11.2 சதவீத வளர்ச்சியினை நிறுவனம் அடைந்து வருவதாகும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சி விஜயகுமார் கூறினார்.
எச்சில் நிறுவனத்திற்கு இது மிக முக்கியமான காலாண்டு என்றும் இது வரை 20 ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டிவிடண்ட்
எச்சிஎல் நிறுவனத்தில் முதலீடுகள் செய்துள்ளவர்களுக்கு ஒரு பங்குக்கு 2 ரூபாய் என டிவிடண்ட் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
சென்ற காலாண்டில் மட்டும் எச்சில் நிறுவனத்தில் புதியதாக 251 நபர்கள் பணிக்கு எடுக்கப்பட்டுள்ளனர் என்றும் மொத்தமாக 1,19,291 ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வெளிநாட்டு வருவாய்
எச்சிஎல் நிறுவனத்தில் சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அமெரிக்க வருவாய் 16.6 சதவீதம் வரை அதிகரித்துள்ளது, அதே நேரம் ஐரோப்பிய மற்றும் பிற நாடுகளில் இருந்து பெறப்பட்ட வருவாய் 2.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
பங்குச் சந்தை
வெள்ளிக்கிழமை காலாண்டு அறிக்கை வெளியிட்ட பிறகு எச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் 0.29 சதவீதம் என 2.75 புள்ளிகள் உயர்ந்து 957.60 சதவீதமாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications