இந்தியாவின் நான்காம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான எச்சிஎல் வெள்ளிக்கிழமை டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3ம் காலாண்டிற்கான அறிக்கையினை வெளியிட்டது. அதில் 6% வரையில் நிகர லாபம் அதிகரித்து 2,194 கோடி ரூபாய்ப் பெற்றுள்ளதாக எச்சிஎல் கூறியுள்ளது.
இதே காலாண்டில் ஒரு வருடத்திற்கு முன்பு எச்சிஎல் நிறுவனம் 2,070 கோடி ரூபாய் வருவாயினைப் பெற்றதாக அறிவித்து இருந்தது.
வருவாய்
சென்ற காலாண்டில் எச்சிஎல் நிறுவனத்தின் வருவாய் 8.4 சதவீதம் உயர்ந்து 12,808 கோடி பெற்றதாகவும் இதுவே சென்ற ஆண்டு 11,814 கோடியாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளனர்.
முக்கியமான காலாண்டு
நடப்பு காலாண்டின் துவக்கத்தில் நிலையான வளர்ச்சியாகத் தற்போது வரை 3.3 சதவீதம் பெற்றுள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 11.2 சதவீத வளர்ச்சியினை நிறுவனம் அடைந்து வருவதாகும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சி விஜயகுமார் கூறினார்.
எச்சில் நிறுவனத்திற்கு இது மிக முக்கியமான காலாண்டு என்றும் இது வரை 20 ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டிவிடண்ட்
எச்சிஎல் நிறுவனத்தில் முதலீடுகள் செய்துள்ளவர்களுக்கு ஒரு பங்குக்கு 2 ரூபாய் என டிவிடண்ட் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
சென்ற காலாண்டில் மட்டும் எச்சில் நிறுவனத்தில் புதியதாக 251 நபர்கள் பணிக்கு எடுக்கப்பட்டுள்ளனர் என்றும் மொத்தமாக 1,19,291 ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வெளிநாட்டு வருவாய்
எச்சிஎல் நிறுவனத்தில் சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அமெரிக்க வருவாய் 16.6 சதவீதம் வரை அதிகரித்துள்ளது, அதே நேரம் ஐரோப்பிய மற்றும் பிற நாடுகளில் இருந்து பெறப்பட்ட வருவாய் 2.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
பங்குச் சந்தை
வெள்ளிக்கிழமை காலாண்டு அறிக்கை வெளியிட்ட பிறகு எச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் 0.29 சதவீதம் என 2.75 புள்ளிகள் உயர்ந்து 957.60 சதவீதமாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications