டெலினார் மற்றும் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனங்கள் முழுமையாகப் பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்த பிறகு அங்குப் பணிபுரியும் 4,000 ஊழியர்களின் நிலை என்ன ஆகும் என்று கேள்வி எழுந்துள்ளது.
இரண்டு நிறுவனங்களுடன் இணைந்த பிறகு 15 சதவீத ஊழியர்களை ஆபிரிக்கா கிளைக்கு மாற்ற ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
பணிகள்
அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களுக்கு ஏற்ப்ப பணியிடங்கள் வழங்கப்படும் என்றும் அதன் படி அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ஏர்டெல் முழு ஆதரவைத் தரும் என்றும் கூறுகின்றனர்.
ஊழியர்கள்
நிறுவனங்கள் இணைவு முடிந்த பிறகு ஊழியர்களை எங்கெல்லாம் பணியில் அமர்த்துவது என்ற விவாதங்கள் தற்போது ஏர்டெல் நிறுவனத்தில் துவங்கியுள்ளது. அதிகப்படியான ஊழியர்களை இந்தியாவிலும் குறிப்பிட்ட அளவிலான ஊழியர்களை மட்டும் தங்களது வெளிநாட்டுக் கிளைகளுக்கும், துணை நிறுவனங்களுக்குக் கொண்டு செல்ல இருக்கிறது.
அக்டோபர் மாதம் வரை டாடா டெலி சர்வீசஸ் நிறுவனத்தில் 5,000 ஊழியர்களும், டெலினார் இந்தியாவில் 2,000 ஊழியர்களும் நேரடி பணியாளர்களாக இருந்துள்ளனர்.
ஒப்பந்தம்
டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கிய காரணத்தினால் பார்தி ஏர்டெல் நிறுவனத்திடம் டெலிகாம் சேவையினை அளித்துவிட்டு வெளியேறிவிட்டது. இந்தப் பரிவர்த்தனைக்காக ஏர்டெல் நிறுவனம் டாடா நிறுவனத்திற்கு எந்தத் தொகையினை அளிக்காமல் 40,000 கோடி ரூபாய் கடனிற்கும் பொறுப்பேற்காமல் நிறுவனத்தினைக் கைப்பற்றியுள்ளது.
டாடா டெலி சர்வீசஸ் ஸ்பெக்டர்ம் வாங்கியதற்கான 9,000 முதல் 10,000 கோடி ரூபாய் தொகையிலும் 70 முதல் 80 சதவீதம் வரை டாடா குழுமம் செலுத்திவிடும்.
வாடிக்கையாளர்கள்
இந்த ஒப்பந்தம் முழுமையாக நிறைவேறும் போது 40 மில்லியன் டெலினார் மற்றும் டாடா டெலி சர்வீசஸ் மகாராஷ்டிரா வாடிக்கையாளர்கள் பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைவார்கள். இதன் மூலமாக டாடா நிறுவனம் உலகின் மிகப் பெரிய டெலிகாம் சந்தையினை வைத்து இருக்கும் நிறுவனமாக உருவெடுக்கும்.
ஏர்டெல்
இந்திய மொபைல் போன் துறையில் மிகப் பெரிய ஒப்பந்தம் இது என்பதால் டாடா வசம் உள்ள ஸ்பெக்டர்ம்கள் மூலமாக ஏர்டெல் நிறுவனத்தினால் இன்னும் சிறப்பான சேவையினை அளிக்க முடியும் என்றும் பங்குதார்களும் அதிகப் பயனடைவார்கள் என்று சுனில் மிட்டல் கூறினார்.
டாடா குழுமம்
டாடா குழுமம் மற்றும் பங்குதார்களுக்கும் இது சிறந்த மற்றும் மிகவும் உகந்த தீர்வு என்று நிறுவனத்தின் தலைவரான என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications