நாடாளுமன்றத்தில் பிப்.1 தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் கலால் வரியை குறைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, சொல்லப்போனால் மத்திய அரசு வரியை குறைக்கும் கட்டாயத்தில் மூழ்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
அதுமட்டும் அல்லாமல் எண்ணெய் வள துறையும் 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைக்கக் கோரிக்கை விடுத்துள்ளது.
தினசரி விலை மாற்றம்
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலை சர்வதேச சந்தைக்கு ஏற்ப தினசரி விலை மாற்றுவதைப் போலப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கும் கொண்டு வரப்பட்டது.
இதன் காரணமாக மிகவும் குறுகிய காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 30 சதவீதம் வரையில் உயர்ந்து மக்களை அதிகளவில் பாதித்தது.
வரிக் குறைப்பு
இந்தத் தினசரி விலை மாற்றம், மத்திய மாநில அரச விதிக்கும் வரியை சேர்த்து விலை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் நாட்டின் வர்த்தகச் சந்தைக்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கும் விதமாகத் தற்போது மத்திய அரசு தனது பட்ஜெட் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க முடிவு செய்துள்ளது.
தேர்தல்
2018ஆம் ஆண்டில் பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது, அதேபோல் 2019ஆம் ஆண்டிலும் பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான பிஜேபி அரசு வெற்றிபெற வேண்டும் என்ற திட்டத்துடன் இதன் மீதான வரியை குறைக்க அதிகளவிலான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதிக வரி
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 50 சதவீத தொகை வரியாக மட்டுமே மக்கள் செலுத்தி வருகின்றனர்.
இதுமட்டும் அல்லாமல் தென் ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது.
இன்றைய விலை நிலவரம்
தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உடனுக்குடன் தெரிந்துகொள்ளத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் பிரத்தியேக சேவையைத் துவங்கியுள்ளது.
இந்தியாவை முந்திய சீனாவும், பாகிஸ்தானும்..!
அமெரிக்கா
100% லாபம்
More From GoodReturns

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications