மதுபான சந்தையில் உலகளவில் புகழ் பெற்று விளங்கும் பக்கார்டி நிறுவனம் டக்கிலா உற்பத்தில் சிறந்து விளங்கும் பேட்ரன் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை 5.1 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பக்கார்டி
5.1 பில்லியன் டாலர் மதிப்பிலான பேட்ரன் நிறுவனத்தின் 30 சதவீத பங்குகளை 2008ஆம் ஆண்டுப் பக்கார்டி வாங்கி வைத்திருக்கும் நிலையில், தற்போது இந்நிறுவனத்தில் மீதமுள்ள பங்குகளையும் பக்கார்டி முழுமையாக வாங்கத் திட்டமிட்டுள்ளது.
ஜான் பால் டிஜோரியா
பேட்ரன் நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜான் பால் டிஜோரியா-விடம் இருக்கும் 70 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இந்நிலையில் இதனைப் பக்கார்டி நிறுவனமே வாங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜானின் மொத்த சொத்து மதிப்பு 3.4 பில்லியன் டாலராகும்.
கடன்
மேலும் வெளியில் சொல்லப்படாத பேட்ரன் நிறுவனத்தின் கடனையும் பக்கார்டி ஏற்றுக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 70 சதவீத பங்குகளையும் விற்பனை செய்யச் சம்மதம் தெரிவித்துள்ளார் ஜான் பால்.
பேட்ரன்
இந்தப் பங்கு விற்பனை 2018ஆம் ஆண்டில் முழுமை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பக்கார்டி நிறுவனத்தின் பிராண்டு எண்ணிக்கை மேலும் அதிகரித்து மதுபான சந்தையில் கூடுதல் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது.