டிவிட்டர் நிறுவன உயர் அதிகாரி திடீர் ராஜினாமா..!

சமுகவலைதள உலகில் பேஸ்புக் நிறுவனத்திற்கு அடுத்த இடத்தில் இருக்கும் டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அந்தோனி நோடோ ராஜினாமா அறிவித்துள்ளார்,

டிவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் ஜாக் டோர்சிக்கு அடுத்தபடியாக மிக முக்கிய அதிகாரியாக இருக்கும் நோடோ வெளியேறுவதால், இந்நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழு அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

2014 முதல்

2014 முதல்

அந்தோனி நோடோ 2014ஆம் ஆண்டில் டிவிட்டர் நிறுவனத்தில் சேர்ந்து உயர் அதிகாரியாக மட்டும் இல்லாமல் உயர் மட்ட நிர்வாகக் குழுவிலும் முக்கிய நபராக இருந்து வந்தார்.

ராஜினாமா

ராஜினாமா

டிவிட்டர் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்யும் அந்தோனி நோடோ, பைனான்ஸ் ஸ்டார்அப் நிறுவனமான SoFi என்னும் நிறுவனத்தின் சிஇஓவாக இணைய உள்ளார்.

உறுதியான தகவல்

உறுதியான தகவல்

இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா மற்றும் SoFi நிறுவனத்தில் இணைவது குறித்து டிவிட்டர் மற்றும் அந்தோனி நோடோ ஆகிய இரு தரப்பும் உறுதியான தகவல்களைச் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

மார்ச் 1 முதல் அந்தோனி நோடோ SoFi நிறுவனத்தில் தனது பணியைத் துவங்க உள்ளார்.

 

கனவு

கனவு

அந்தோனி நோடோவிற்கு நெருக்கமானவர்கள் வெளியிட்ட தகவல்கள் மூலம் இவர் நீண்ட நாட்களாகச் சிஇஓவாகப் பணியாற்ற வேண்டும் ஆசை கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+