ஆர்பிஐ தங்களது பணிகளை சரியாக செய்கிறது: ரகுராம் ராஜன்

முன்னால் ஆரிபிஐ கவர்னர் தற்போது உள்ள நாணய கொள்கை குழுவை புகழ்ந்துள்ளார். ஆர்பிஐ கவர்னராக இவர் இருந்த போது ரெப்போ வட்டி விகிதத்தினை இவர் குறைக்கவில்லை என்ற காரணத்திற்காகப் பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.

வெளிநாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற ரகுராம் ராஜன் உர்ஜித் தலைமையிலான 6 நபர்கள் கொண்ட நாணய கொள்கை குழு பணவீக்கத்தினை எதிர்த்துச் சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறியுள்ளார்.

ரெப்போ விகிதம்

ரெப்போ விகிதம்

பண வீக்கம் ஒரு பக்கம் இருக்கும் பட்சத்திலும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி நடைபெற இருக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் உர்ஜித் பட்டேல் ரெப்போ வட்டி விகிதத்தினைக் குறைக்கமாட்டர் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

விலை இலக்குகள்

விலை இலக்குகள்

அதிகப் பணவீக்க அழுத்தங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விலை இலக்குகள் பயனுள்ளதாக உள்ளன என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார். ஆர்பிஐ கவர்னாராக இருந்த போதே இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுத் தற்போது தான் செயல்பாட்டிற்கு வருகிறது.

வரா கடன்

வரா கடன்

நாணய கொள்கை குழுவைத் தவிர்த்து 210 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வரா கடனை திரும்பப் பெறுவதற்கான முக்கியக் காரணியாகவும் ரகுராம் ராஜன் செயல்பட்டதாகவும் ஆர்பிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

2018-ம் ஆண்டு வரா கடனில் மிகப் பெரிய முன்னேற்றத்தினை அடைந்த அதிக அளவிலான கடன் வசூலிக்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி தலைவரான ரஜினிஷ் குமார் கூறியுள்ளார்.

 

புதிய வங்கி திவால் சட்டம்

புதிய வங்கி திவால் சட்டம்

மோசமான நிலை தற்போது இல்லை என்று அரசு வெகு சீக்கிரமாகக் கூறி வருகிறது, ஆனால் அரசு கொண்டு வர உள்ள புதிய வங்கி திவால் சட்டம் போன்றவை வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் என்றும் ராஜன் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+