இந்தியாவின் முதல் மிதக்கும் சந்தை கொல்கத்தாவின் மேற்கு வங்கத்தில் உள்ள பட்டூலியில் திறக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்தையில் 200 கடைகளுக்கு மேல் உள்ளது.
எனவே இந்தச் சந்தை எப்படி வடிவமைக்கப்பட்டுள்ள போன்ற முழு விவரங்களையும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
என்னவெல்லாம் இங்குக் கிடைக்கும்?
கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையம் கட்டமைத்துள்ள இந்தச் சந்தையில் படகுகள் மூலமாகப் பட்டூலியில் உள்ள ஏரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குக் கடைக்காரர்கள் பழம், காய்கறிகள், மீன் போன்றவை கிடைக்கும்.
முதலீடு
படகுகள் மூலமாகக் கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களது கடைகளைத் திறக்க மற்றும் பிற கட்டுமான வசதிகளை ஏற்பாடு செய்ய 10 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.
அளவு
இந்தியாவின் முதல் மிதக்கும் சந்தை 500 மீட்டர் நீலமும், 60 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
சோதனை
பட்டூலியின் விஐபி சந்தைக்குத் தொடர்ந்து வரும் வாடிக்கையாளர்கள் மிதக்கும் சந்தையில் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் என்று கூறுகின்றனர். ஆனால் முன்பு சந்தையில் தங்களுக்குத் தேவையான காய்கறிகளைக் கைகளால் தொட்டுப்பார்த்து வாங்கியதாகவும் ஆனால் தற்போது அப்படிச் செய்ய வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளனர்.
புதிய வகை ஷாப்பிங்
அருகில் பிற சந்தைகள் இருந்தாலும் இங்கு வந்து பொருட்களை வாங்குவது என்பது புதிய அனுபவமாக உள்ளது என்று வாடிக்கையாளர்களும் வணிகர்களும் கூறுகின்றனர்.