இந்தியாவில் ஆடை உற்பத்தி மையமாக வைத்து ஒட்டுமொத்த டெக்ஸ்டைல் துறையை ஊக்குவிக்கும் வகையில் 6,000 கோடி ரூபாய் அளவிலான நிதியுதவி அளிக்க உள்ளதாக டெக்ஸ்டைல் துறை அமைச்சரான ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
இத்துறைக்கு இந்தியாவில் வளர்ச்சி வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கிறது. ஆனாலும் இத்துறை பல்வேறு விதமான சிக்கல்களைச் சந்திக்கிறது. இதனால் இத்துறை நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அளவுகள் அதிகளவில் குறைந்து வருகிறது.
இதே பிரச்சனைகளால் இத்துறையில் இருக்கும் சிறு நிறுவனங்கள் பல நேரங்களில் திவாலாகும் நிலைக்குக் கூடத் தள்ளப்படுகிறது.
தற்போது அளிக்கப்படும் நிதியின் மூலம் அடுத்தச் சில வருடங்களில் நிலையான வர்த்தக மற்றும் உற்பத்தி வளர்ச்சியைப் பெறும் என நம்பப்படுகிறது. இந்தியாவில் சிந்தடிக் மற்றும் ரேயான் துணிகளின் உற்பத்தி அளவு 2017ஆம் ஆண்டில் 5.47 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2018ஆம் நிதியாண்டில் 6 பில்லியன் டாலரைத் தொடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.