2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கட்கிழமை காலை 11 மணிக்குத் துவங்குகிறது. லோக் சபா மற்றும் ராஜ்ய சபா ஆகிய இணைந்த கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றிக் கூட்டத்தொடரை துவக்கி வைக்கிறார்.
2018ஆம் ஆண்டுத் துவங்கி நடக்கும் முதல் கூட்டத்தொடர் இது.
மசோதாக்கள்
இன்று துவங்கிய கூட்டத்தொடர் பிப்ரவரி 9ஆம் தேதி வரையிலை நடக்கிறது. இக்கூட்டத்தில் லோக் சபாவில் 28 மசோதாக்களும், ராஜ்ய சபாவில் 39 மசோதாக்களும் தாக்கல் செய்யப்படுகிறது.
முத்தலாக் தடுப்பு மசோதா, அனைவருக்கும் இலவச கல்வி, சம்பள உயர்வு மற்றும் அளவு குறித்து நிர்ணயம் செய்யும் மசோதா உட்படப் பல்வேறு முக்கிய மசோதாக்களும் இந்தக்கூட்டத் தொடரில் ஆலோசனைக்கு வைக்கப்படுகின்றன.
பொருளாதார ஆய்வறிக்கை
இன்றைய கூட்டத்தில் மக்கள் அதிகம் கவனிக்க வேண்டிய பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. 2017-18 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார விவரங்கள் மற்றும் அளவீடுகளை விளக்கும் பொருளாதார ஆய்வறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
பிப்ரவரி 1
பட்ஜெட் கூட்டத்தொடரின் மத்தியில் அதாவது பிப்ரவரி 1ஆம் தேதி 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சரான அருண் ஜெட்லியால் தாக்கல் செய்ய உள்ளார்.
சிறப்புப் பக்கம்
பட்ஜெட் குறித்து அனைத்து முக்கியமான செய்திகளும் தெரிந்துகொள்ளத் தமிழ் குட்ரிட்டன்ஸ்-இன் சிறப்பு பக்கத்தை பாருங்கள்.
வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்..
வீட்டில் இருந்த பணம் சம்பாதிக்கச் சிறப்பான வாய்ப்பை குட்ரிட்டனஸ் தளம் உங்களுக்கு அளிக்கிறது. எழுதும் ஆர்வம் கொண்டவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு, உடனே பதிவு செய்யுங்கள்!!